முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவனந்தபுரம் அருகே கார்-லாரி மோதல்: 5 பேர் பலி

புதன்கிழமை, 27 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருவனந்த புரத்தை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. காரில் கொல்லம் அருகே உள்ள சிரக்கரா பகுதியை சேர்ந்த 5 பேர் இருந்தனர்.

இந்த கார் சம்பவத்தன்று 11 மணி அளவில் திருவனந்தபுரம் கல்லம்பலம் தொட்டகாட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லத்துக்கு சென்ற மீன் லாரி, மீது மோதியது. இதில் கார் நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.

இதில் காரில் பயணம் செய்த விஷ்ணு, ராஜீவ், அருண் மற்றும் சுதீஷ் உள்பட 5 பேர் பலியாகினர். காரில் பயணம் செய்த மற்றொருவர் அடையாளம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

விபத்து ஏற்படுத்திய லாரியை கைப்பற்றி அதன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து