முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வன்னியருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

தமிழகத்தில் வன்னியர் சமூகத்துக்கு அளிக்கப்பட்ட 10.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக கவர்னரும்  ஒப்புதல் அளித்தார். இதனை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த அபிஷ்குமார்,சுப்ரீம் கோர்ட்டில்  மனுத் தாக்கல் செய்திருந்தார்.  இதனை விசாரித்த நீதிபதிகள், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். மேலும் அபிஷ்குமார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து