முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. அரசு வழக்கறிஞர் மரணம் : இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க அரசு வழக்கறிஞர் ராஜசேகர் மறைவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர் 

இது குறித்து அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு துறை செயலாளரும், அரசு வழக்கறிஞருமான ராஜசேகர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தோம்.

எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோர் மீதும் தொடர்ந்து கட்சி தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த ஆரம்பகால கட்சியின் உடன்பிறப்பு ராஜசேகரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து