முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பணிக்கு இடையில் தகாத வார்த்தை பேசிய டாக்டரின் கன்னத்தில் பளார் விட்ட நர்ஸ்

செவ்வாய்க்கிழமை, 27 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

உத்தரபிரதேசத்தில் தகாத வார்த்தை பேசிய டாக்டரின் கன்னத்தில் நர்ஸ் அறை விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரபிரதேசத்தில் கொரோனா பெருந்தொற்று காட்டுத் தீயாய் பரவி வருகிறது. அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பு முறையாக இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர். 

இந்த நிலையில் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒரு டாக்டருக்கும் , நர்சுக்கும் இடையில்  கடும் மோதல் ஏற்பட்டது. டாக்டர் தகாத வார்த்தையால் பேசியதால்  ஒரு கட்டத்தில் நர்ஸ்  டாக்டரின் கன்னத்தில் பளார் என அறைந்து விட்டார். இதனால் கோபமடைந்த டாக்டர் அந்த நர்சை  திருப்பி தாக்கினார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இது குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் ராம்ஜி மிஸ்ரா கூறியதாவது  நான் அவர்கள் இருவரிடமும் பேசினேன், அவர்கள் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதிக வேலைச்சுமை இருந்ததாகவும் அதனால்  அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டதாக கூறுகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து