முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் இன்று முதல் 2 வாரத்திற்கு முழு ஊரடங்கு: மக்கள் ஒத்துழைக்க எடியூரப்பா வேண்டுகோள்

புதன்கிழமை, 28 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூர் : கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் பிறப்பிக்கப்படவுள்ள 2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் இன்று (ஏப்.29) மாலை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படவுள்ளது. எனினும் காலை 6 முதல் 10 மணி வரை அத்தியாவசிய பொருள்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

10 மணிக்குப் பிறகு அனைத்து கடைகளும் மூடப்படும். பொதுப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இது குறித்து முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்தால் கொரோனா தொற்றி பரவலைக் கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து