முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் 14.78-கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன : மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தகவல்

புதன்கிழமை, 28 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் 14.78- கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலையின் தாக்கம் மிகக்கடுமையாக உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. 

பல மாநிலங்களில் ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.  கொரோனா தடுப்பூசி போடும் பணியும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

இந்த நிலையில்,  நாட்டில் இதுவரை 14.78 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த  24 மணி நேரத்தில் 25 லட்சத்திற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு போடப்பட்டது. மே 1-ம் தேதி 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து