முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் முடிவுகளை கேட்டு வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தேர்தல் முடிவுகளை கேட்டு வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றும் முடிந்த பிறகு அதற்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக திரையில் அறிவிக்கப்பட்டன.  

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணுவதற்கு 3,372 மேஜைகளும், தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு 739 மேஜைகளும், வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் போன்றோர் மின்னணு முறையில் அளித்த வாக்குகளை எண்ணுவதற்காக 309 மேஜைகளும் என மொத்தம் 4,420 மேஜைகள் போடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டுகள்  மற்றும் காவல் துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் கொரோனா முழு ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டதால் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே போலீசார் தவிர மற்றவர்கள் வருவதற்கு கூட தடை விதிக்கப்பட்டு இருந்தது. தேவையின்றி பிரச்சினை செய்யும் முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் முடிவுகளைக் கேட்டு அரசியல் கட்சியினர் உட்பட யாராவது வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையில் ஈடுபடும் நபர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து