முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது : டெல்லி சுகாதார அமைச்சர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வரும் 17-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் கடந்த சில நாடகளாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. 

இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 

கடந்த சில நாட்களில் டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 36 சதவீதம் முதல் 19.1 சதவீதம் வரை குறைந்துள்ளது, ஒரு நாள் கொரோனா பாதிப்பு 28,000 லிருந்து 12,500 வரை குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதத்தை 5 சதவீதத்திற்கும் குறைவாக்கும் வரை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்த அலை மிகவும் அதிகமாக உள்ளது, ஆனால் ஏப்ரல் இறுதி முதல் அதன் உச்சம் படிப்படியாக குறைந்து வருகிறது. தினமும் சுமார் 80,000 கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஊரடங்கு காரணமாக, மக்கள் வெளியே வரவில்லை. ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளுக்கான தேவை இப்போது குறைந்துள்ளது.

சுமார் 23,000 படுக்கைகள் உள்ளன, அதில் 20,000 பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் வழங்கி வருவதை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து