எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : இலங்கையில் நடக்கும் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் பதவிக்கான லிஸ்ட்டில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல். ராகுல் பெயர்கள் அடிபடுகின்றன. குறிப்பாக தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா இடைய போட்டி நிலவுகிறது.
ஒரே இடத்தில் போட்டி
இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கைக்கு சென்று 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூலை 13, 16, 19, 22, 24, 27 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 6 ஆட்டங்களும் ஒரே இடத்தில் நடத்தப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அனேகமாக கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியம் இந்த போட்டிக்காக தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது.
இங்கிலாந்து பயணம்
இந்த தொடர் நடைபெறும் சமயத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும். அந்த அணியில் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுல், ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால், சுப்மான் கில் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இளம் வீரர்கள் படை
இதனால் இலங்கை தொடருக்கு 2-ம் தர ( பி-டீம் )இந்திய அணியே அனுப்பப்படுகிறது. இந்த அணியில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, பிரித்வி ஷா, புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், சூர்யகுமார் யாதவ், தேவ்தத் படிக்கல், வருண் சக்ரவர்த்தி, சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திவேதியா உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணிக்கு கேப்டன் யார்?
ஆனால் இந்த அணிக்கு கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நேற்று கூறுகையில், ‘ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டை காயத்துக்கு ஆபரேஷன் செய்து தற்போது ஓய்வில் இருக்கிறார். அவர் உடல்தகுதியுடன் இருந்தால் சந்தேகத்துக்கு இடமின்றி அவர் தான் கேப்டன். ஆனால் இலங்கை தொடருக்குள் அவர் முழு உடல்தகுதியை எட்டுவாரா? என்பதில் உறுதி இல்லை. பொதுவாக இது போன்று ஆபரேஷன் செய்யப்பட்டால் அதன் பிறகு ஓய்வு, காயத்தில் இருந்து மீள்வதற்கான உடற்பயிற்சி முறைகள், களம் திரும்புவதற்கான தீவிர பயிற்சி இவற்றுக்கு கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகி விடும்.
முன்னணியில் தவான்...
எனவே தற்போது கேப்டன் பதவிக்கு தொடக்க ஆட்டக்காரர் 35 வயதான ஷிகர் தவான், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடையேத் தான் போட்டி காணப்படுகிறது. மேலும், இந்த பட்டியலில் கே.எல். ராகுல் பெயரும் அடிபடுகிறது. தவான் கடந்த 2 ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடி உள்ளார். தற்போது பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல்.-ல் ரன் குவிப்பில் (8 ஆட்டத்தில் 380 ரன்கள்) முதலிடத்தில் இருக்கிறார். அது மட்டுமின்றி தற்போதைய அணித்தேர்வுக்கு உள்ள வீரர்களில் மூத்த வீரர் தவான் தான். இந்திய அணிக்காக கடந்த 8 ஆண்டுகளாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே கேப்டனாக நியமிக்கப்பட அவருக்கு தான் வாய்ப்பு அதிகம்.
பேட்டிங்கில் அசத்தல்
27 வயதான ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரை பணிச்சுமையை கருத்தில் கொண்டு சமீபகாலமாக அவர் பந்து வீசுவதில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக ஆடிய போது ஒரு ஓவர் கூட பவுலிங் செய்யவில்லை. ஆனாலும் அவர் பேட்டிங்கில் தனிநபராக வெற்றியை தேடித்தரக்கூடிய திறமைசாலி. ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். அதனால் அவரை கேப்டன் பதவிக்கான வாய்ப்பில் இருந்து ஒதுக்கி விட முடியாது. யாருக்கு தெரியும். கூடுதல் பொறுப்பு மூலம் அவரது மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்படலாம். முதுகு காயம் ஆபரேஷனுக்கு பிறகு பெரிய அளவில் பந்து வீசாத பாண்ட்யா, ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் கவனம் செலுத்துகிறார்’ என்றார்.
கட்டாயத்தில் ராகுல்...
மேலும் இந்த போட்டியில் இந்திய அணியின் மற்றொரு மூத்த வீரராக உள்ள கே.எல். ராகுலும் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள அவர் அதை செய்ய தவறினால் இலங்கை சுற்றுப்பயணத்தில் அவர் கூட அணியை வழிநடத்த வாய்ப்பு உள்ளது. இதில் ராகுலுக்கு முதல் வாய்ப்பு கொடுக்கப்படும் என்றே தெரிகிறது.
இலங்கைக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்விக்கு பி.சி.சி.ஐ விரைவில் பதிலளிக்கும் என்றே தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை23 hours 59 min ago |
ஆனியன்ப்ரை3 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 23 hours ago |
-
தங்கம் விலை பவுன் 160 ரூபாய் குறைந்தது
11 May 2024சென்னை : அட்சய திருதியை முன்னிட்டு நேற்று முன்தினம் (மே.10) ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை உயர்ந்த நிலையில் நேற்று (மே.11) காலை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
சவுக்கு சங்கர் விவகாரம்: யூடியூப் சேனல் எடிட்டர் கைது
11 May 2024சென்னை : சவுக்கு சங்கர் விவகாரத்தில் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி: தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
11 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி: தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 May 2024சென்னை, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பூமியை தாக்கிய சூரிய புயல்: தொலைத்தொடர்பு பாதிக்கும் அபாயம்
11 May 2024வாஷிங்டன் : பூமியை தாக்கிய சூரிய புயலால் தொலைத்தொடர்பு, மின் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
இளம்பெண் மரணம் எதிரொலி: கேரளாவில் கோயில்களில் அரளி பூவை பயன்படுத்துவதற்கு தடை
11 May 2024திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் அரளிப்பூவை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள கோயில்களில் அரளி பூக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வரும் 14-ம் தேதி வெளியீடு: அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு
11 May 2024சென்னை, தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
-
பார்லி. தேர்தலில் பா.ஜ.க, வென்றால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுவர் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
11 May 2024புதுடெல்லி : பா.ஜ., வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்படுவர்'' என டெல்
-
3ம் கட்ட வாக்குப்பதிவு சதவீதம்? - அதிகாரப்பூர்வமாக அறிவித்த தலைமை தேர்தல் ஆணையம்
11 May 2024புதுடில்லி : 3ம் கட்ட ஓட்டுப்பதிவு மே 7 ம் தேதி நடந்தது. அதில் 65.68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக 4 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.
-
உ.பி.யில் பயங்கரம்: தாய், மனைவி, பிள்ளைகளை கொன்று ஆசாமி தற்கொலை
11 May 2024லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் தாய், மனைவி, 3 பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட போதை ஆசாமியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழகத்தில் 12 இடங்களில் இருந்து பார்க்கலாம்: மே 14 வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வானில் தெரியும்
11 May 2024சென்னை : சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மே 14ஆம் தேதி வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பூமியில் இருந்தபடியே வெறும் கண்களால் பாரக்க முடியும் என்று அமெர
-
அரசியல் சாசன ரீதியிலான உறவை பேண பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு : சந்திரசேகர ராவ் விளக்கம்
11 May 2024புதுடில்லி : மத்திய அரசுடன் அரசியல் சாசன ரீதியில் உறவை பேண வேண்டும் என்பதற்காக தான் கடந்த காலங்களில் பா.ஜ.,வை ஆதரித்தோம் என பிஆர்எஸ் கட்சி தலைவரும், தெலுங்கானா முன்னாள்
-
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது எப்படி? - வழிமுறைகள் வெளியீடு
11 May 2024சென்னை : செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
கேரளாவில் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழ்நாட்டில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
11 May 2024சென்னை : கேரளத்தில் வேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வரும் வெஸ்ட் நைல் காய்ச்சலை அடுத்து தமிழகத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டியவை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட
-
பத்மஸ்ரீ விருது வென்ற பழங்குடியின பெண்ணின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி
11 May 2024புவனேஷ்வர் : பத்மஸ்ரீ விருது வென்ற பழங்குடியின பெண்ணின் காலில் விழுந்து பிரதமர் மோடி வணங்கிய நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
-
மாணவர்கள் 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: 10-ம் வகுப்பு துணை தேர்வு கால அட்டவணை வெளியீடு : அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு
11 May 2024சென்னை : தமிழகத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பத்ம பூஷண் விருதை விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார் பிரேமலதா
11 May 2024சென்னை : பத்ம பூஷண் விருதுடன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, நிருபர்கள் சந்திப்பில், விருது வாங்கும் போது கேப்டன் தான் மனதில் இருந்தார் என பிரேமலதா தெ
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
திடீரென வீசிய புழுதிப்புயல்: டெல்லியில் மரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு
11 May 2024டெல்லி : டெல்லியில் வீசிய புழுதிப்புயலின்போது மரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
ஆப்கானில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு
11 May 2024காபுல் : ஆப்கானில் பெய்ய கனமழை, வெள்ளத்திற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. பலி மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.