முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் ஜூலை 1 முதல் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த திட்டம்

புதன்கிழமை, 26 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

காந்திநகர் : குஜராத்தில் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ஜூலை 1-ம் தேதி முதல் நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தேர்வு நடத்தப்படவுள்ளதாக குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா தெரிவித்துள்ளார். 

குஜராத்தில் 6 லட்சத்து 83 ஆயிரம் மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள நிலையில், ஒரு அறையில், 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாணவர்களுக்கு தங்களின் குடியிருப்புக்கு அருகிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து