முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 5-வது நாளாக குறைந்த கொரோனா பாதிப்பு

சனிக்கிழமை, 12 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் 5-வது நாளாக நேற்று கொரோனா பாதிப்பு 85 ஆயிரத்திற்கும் கீழே சென்றுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் 5-வது நாளாக நேற்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 84 ஆயிரத்து 332 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 59 ஆயிரத்து 155 ஆக உயர்வடைந்து உள்ளது.   

கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் மேலும் 4,002 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,67,081 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 311 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 79 லட்சத்து 11 ஆயிரத்து 384 ஆக உயர்வடைந்து உள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 10,80,690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 24 கோடியே 96 லட்சத்து 304 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து