எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நாடு முழுமையும் நதிகள் இணைக்கப்படுமா என்பன உள்ளிட்ட வைகோ எம்.பி.யின் கேள்விகளுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து ம.தி.மு.க. தலைமை நிலையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
நாடாளுமன்றத்தில் எம்.பி. வைகோ, மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் 4 கேள்விகளைக் கேட்டிருந்தார்.
1. நாடு முழுமையும் நதிகளை இணைப்பதற்கு, அரசு ஏதேனும் திட்டம் வகுத்து இருக்கின்றதா?
2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள் தேவை; புதிய திட்டமாக இருந்தால், இதற்கு முன்பு செயல்படுத்திய திட்டங்களில் இருந்து, எந்த அளவிற்குத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்கள் தேவை.
3. காவிரி - குண்டாறு ஆகிய நதிகளை இணைப்பது குறித்து, தமிழக அரசிடம் இருந்து ஏதேனும் திட்ட வரைவு வந்துள்ளதா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள் தருக;
4. தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கான திட்டங்கள்; குறிப்பாக கோதாவரி- கிருஷ்ணா- காவிரி இணைப்பு; மற்றும் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால வரையறை குறித்த விவரங்கள் தருக.
இதுகுறித்து 26.07.2021 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத் அளித்த விளக்கம் வருமாறு:
கேள்வி எண் 1,2க்கு விளக்கம்:
1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மத்திய நீர்ப்பாசனத் துறை, நீர்வளம் மிகுதியான ஆற்றுப்படுகைகளில் இருந்து நீர்வளம் குறைவான ஆறுகளுக்கு நீரைப் பகிர்வதன் மூலம் நீர் வளங்களை மேம்படுத்துவது குறித்து, தேசிய முன்னோக்குத் திட்டம் (National Perspective plan-NPP) ஒன்றை வரைந்தது. அந்தத் திட்டத்தின் கீழ், தேசிய நீர்வள முகமை (National Water Development Agency NWDA), 30 இணைப்புத் திட்டங்களை அடையாளம் கண்டது.
அவற்றுள் 16 திட்டங்கள் தென்னிந்தியாவிலும், 14 திட்டங்கள் இமயமலை ஆறுகளின் பாசனப் பகுதிகளிலும் செயல்படுத்துவற்கான ஆய்வு அறிக்கை வரையப்பட்டது. அதுகுறித்த விவரங்கள் இணைப்பில் தரப்பட்டுள்ளன.
கேள்வி 3-க்கு விளக்கம்:
வெள்ளப் பெருக்கின்போது காவிரி நீரை, தெற்கு வெள்ளாறு வரை கொண்டு போவதற்கான திட்டத்திற்குக் கொள்கை அளவில் ஏற்பு அளிப்பதுடன், நிதி உதவியும் கோரி, தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது.
தேசிய முன்னோக்குத் திட்டத்தின்படி, காவிரி (கட்டளை)- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது, மகாநதி- கோதாவரி- கிருஷ்ணா- பெண்ணைஆறு- காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும்.
இந்தத் திட்டம் குறித்து, தேசிய நீர்வள முகமையின் விரிவான அறிக்கை, இந்தத் திட்டத்தில் தொடர்புடைய மாநிலங்களுக்கு, 2020 ஆகஸ்ட் மாதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டில், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், 4.48 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் 2050ஆம் ஆண்டு வாக்கில் கூடுதலாக 28 லட்சம் மக்களுக்கு மாதந்தோறும் 79 எம்சிஎம் நீர் வழங்கிட வகை செய்யும்; தொழிற்சாலைகளின் கூடுதல் தேவைக்காக, 139 எம்.சி.எம். நீர் கிடைக்கும்.
கேள்வி 4-க்கு விளக்கம்:
தென்னிந்திய நதிகள் இணைப்பிற்கான 16 திட்டங்களுள் 12 திட்டங்கள், தெற்குப் பகுதிக்கானவை:
1. மகாநதி (மணிபத்ரா) - கோதாவரி (தௌலேஸ்வரம்) இணைப்பு
2. கோதாவரி (போலாவரம்) - கிருஷ்ணா (விஜயவாடா) ஆந்திர அரசு செயல்படுத்தி விட்டது.
3. கோதாவரி (ஈஞ்சம்பள்ளி) - கிருஷ்ணா (புலிசிந்தலா) இணைப்பு
4. கோதாவரி (ஈஞ்சம்பள்ளி) - கிருஷ்ணா (நாகார்ஜூனசாகர்) இணைப்பு
5. கிருஷ்ணா (நாகார்ஜூனசாகர்) - பெண்ணை ஆறு (சோமசீலா) இணைப்பு
6. கிருஷ்ணா ( ஸ்ரீ சைலம்) - பெண்ணை ஆறு இணைப்பு
7. கிருஷ்ணா (அலமாட்டி) - பெண்ணை ஆறு இணைப்பு
8. பெண்ணை ஆறு (சோமசீலா) - காவிரி (கல்லணை) இணைப்பு
9. காவிரி (கட்டளை) - வைகை - குண்டாறு இணைப்பு
10. பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு இணைப்பு
11. நேத்ராவதி-ஹேமாவதி இணைப்பு
12. பெட்டி - வர்தா இணைப்பு
மேற்கண்ட திட்டங்களுள், ஒன்று முதல் பத்து வரையிலான திட்டங்களுக்கு, முதல் கட்ட ஆய்வறிக்கை நிறைவு பெற்று, தொடர்புடைய மாநிலங்களுக்குத் தரப்பட்டு இருக்கின்றது.
மணிபத்ரா- ஈஞ்சம்பள்ளி அணைகள் இணைப்பில், பெரும்பகுதி நிலம் நீருக்குள் மூழ்குவதால், எஞ்சிய நீரைக் கோதாவரியின் துணை ஆறான இந்திராவதி படுகைக்குத் திருப்பி விடுவது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை; மாற்றுத் திட்டம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, முன்னோக்கு அறிக்கை, தொடர்புடைய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட உள்ள ஆறுகளின் பட்டியல், இணைப்பில் தரப்பட்டு உள்ளது.
நதிகள் இணைப்பிற்கான சிறப்புக்குழு ( The special Committee for Interlinking Rivers -ILR), தொடர்புடைய மாநிலங்களின் கருத்துகளை ஆராய்ந்தபிறகு, அனைவருக்கும் இணக்கமான முறையில் திட்டத்தின் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்.
நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு படிக்கட்டுகள் உள்ளன. இணக்கத் தீர்வை ஏற்படுத்துவதற்கான கருத்துப் பரிமாற்றங்கள், திட்ட முன் வரைவுகள், தொடர்புடைய முகமைகளிடம் இருந்து இசைவு பெறுதல், சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை அமைச்சகத்தின் ஏற்பு, பருவநிலை மாற்றங்கள் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் ஏற்பு வழங்குதல், நீர்ப்பாசனம் தொடர்பான அறிஞர்களின் கருத்துகளைப் பெறுதல், வெள்ளத் தடுப்பு குறித்த நடவடிக்கைகள், நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல், அத்துடன் திட்டத்தைச் செயல்படுத்துவற்கான நிதிமுதல் பெறுவதற்கான ஏற்பாடுகள், இதுபோன்ற அனைத்துப் பணிகளும் நிறைவு பெற வேண்டும்.
எனவே, இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால வரையறை மாறுபட்டுக்கொண்டே இருக்கும். தொடர்புடைய அனைத்து மாநிலங்களுக்கு இடையிலும் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே, செயல்படுத்த முடியும்.
இவ்வாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளதாக ம.தி.மு.க. தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 12 hours ago |
ஆனியன்ப்ரை4 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
வார இறுதி மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட நியூயார்க்கில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இயங்கும்
12 May 2024நியூயார்க் : வார இறுதி நாட்கள் மற்றும் பிற விடுமுறை நாட்கள் உள்பட ஆண்டு முழுவதும் இந்திய தூதரகம் திறந்திருக்கும் என்றும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பிற்பகல் 2 மணி மு
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.