எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு: பெங்களூருவில் நாயண்டஹள்ளி - கெங்கேரி இடையே மெட்ரோ ரயில் சேவையை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
பெங்களூருவில் நாகசந்திரா முதல் பனசங்கரி எலச்சனஹள்ளி வரையிலும், பையப்பனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி வரையிலும் 42 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் சேவை கடந்த 9 ஆண்டுகளுக்கு ஆண்டு தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் விஸ்தரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் எலச்சனஹள்ளியில் இருந்து அஞ்சனாபுரா வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு அதில் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ரூ.1,920 கோடி செலவில் நாயண்டஹள்ளியில் இருந்து கெங்கேரி வரை ஏழரை கிலோ மீட்டர் நீளத்திற்கு 2-வது நீட்டிப்பு திட்டத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து உள்ளன. இதையடுத்து அந்த நீட்டிப்பு பாதையில் நேற்று 29-ம் தேதி மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி அந்த இந்த மெட்ரோ ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சி நாயண்டஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றறது. இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங்புரி ஆகியோர் கொடி அசைத்து வைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்தனர். இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


