முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீக்குச்சிகள் மூலம் விநாயகர் சிலையை உருவாக்கிய கலைஞர்

வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

ஒடிசாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீக்குச்சிகளை கொண்டே விநாயகர் சிலையை கலைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

ஒடிசாவின் பூரி நகரை சேர்ந்தவர் சஸ்வத் சாஹூ.  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வித்தியாச விநாயகர் வடிவம் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளார்.  இதற்காக அவர் 5,621 தீக்குச்சிகளை கொண்டு 8 நாட்களாக அதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.  இதன் பயனாக 23 அங்குலம் நீளம் மற்றும் 22 அங்குலம் அகலம் கொண்ட விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி என்னுடைய வீட்டிலேயே வழிபடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து