முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி. கொலை பயங்கரவாத செயல் - பிரிட்டன் போலீஸ்

ஞாயிற்றுக்கிழமை, 17 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சர் டேவிட் அமெஸ் (69), எஸ்செக்ஸ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த எம்.பி. அமெஸ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அங்கு வந்த மருத்துவக் குழு எம்.பி.க்கு முதலுதவி சிகிச்சை அளித்தது.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். எம்.பி கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரிட்டன் எம்.பி கொல்லப்பட்டதை பயங்கரவாத செயலாக அறிவித்து பிரிட்டன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து