முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பி.எஸ் சொன்னது சரியே: ஜே.சி.டி.பிரபாகர் அதிரடி

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சசிகலாவை சேர்ப்பது பற்றி தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என ஓ.பி.எஸ் கூறியது சரியே என்று அ.தி.மு.க. அமைப்புச் செயலர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

அதிமுக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சசிகலாவை சேர்ப்பது பற்றி தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என ஓ.பி.எஸ். கூறியது சரிதான். அ.தி.மு.க.வின் எதிர்கால நலனை சிந்திக்கக்கூடிய தலைமை நிர்வாகிகள் உரிய முடிவை எடுக்க வேண்டும். ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். இடையே கருத்து வேறுபாடு இல்லை என நம்புகிறேன். 

ஓ.பி.எஸ். அவர்களின் நிலைப்பாடுதான் எனக்கும். எதிர்காலத்தில் இந்த இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என தலைமை கழக நிர்வாகிகள் கலந்து பேசி எடுக்க வேண்டிய முடிவு இது. இதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து