எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லண்டன் : உலகத்தையே கடந்த இரு ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மனித குலத்துக்குப் பெரும் சவாலாக இருந்து வருகிறது. கொரோனாவை அடக்கவும், அதனை கட்டுக்குள் கொண்டு வரவும் மருத்துவ வல்லுநர்கள் பல்வேறு தடுப்பூசிகளைக் கண்டுபிடித்தாலும், குறிப்பிட்ட இடைவெளியில் வெவ்வேறு வடிவத்தில் கொரோனா வைரஸ் தலைதூக்குகிறது.
அந்த வகையில் கொரோனா வைரஸில் மிகவும் மோசமானதாகவும், மனித குலத்துக்குப் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது டெல்டா வகை வைரஸ்தான். இப்போது டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து புதிதாக உருவெடுத்துள்ளது ஏஒய்.4.2 வைரஸ்.
இந்த ஏஒய்.4.2 வைரஸ் பிரிட்டனில் கடந்த ஜூலை மாதம் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின் படிப்படியாக பிரிட்டனில் அதிகரித்து, பல்வேறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏஒய்.4.2 வைரஸ் குறித்து தீவிரமாக பிரிட்டன் மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்யவும், அடுத்த கட்டத்தை நோக்கி நகரவும் தொடங்கியுள்ளனர்.
பிரிட்டனில் கொரோனா தொற்று குறைந்தது, பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திப் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விட்டார்கள் என்பதால், கட்டுப்பாடுகள் அனைத்தையும் பிரிட்டன் அரசு தளர்த்தியது. ஆனால், கடந்த சில நாட்களாக பிரிட்டனில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைதூக்கத் தொடங்கி, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக பாதிக்கப்படுவோர் வயது வேறுபாடின்றி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
டெல்டா வகை வைரஸை விட அதிகமான பரவல் வேகம் கொண்டதா ஏஒய்.4.2 வைரஸ் என்ற கேள்விக்கு பிரிட்டன் சுகாதாரத்துறை அளித்த விளக்கத்தில், டெல்டா வகை வைரஸோடு ஒப்பிடுகையில் ஏஒய்.4.2 வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருப்பதாகக் கருதுகிறோம். ஆனால், உறுதி செய்யவில்லை. சில ஆதாரங்கள் கிடைத்திருந்தாலும் உறுதி செய்வதற்குப் பல ஆதாரங்கள் இன்னும் தேவைப்படுகிறது. டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து உருமாற்றம் பெற்றதுள்ளதா என்பதை அறிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
டெல்டா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் ஏஒய்.4.2 வைரஸ். டெல்டா வைரஸ் என்பது பி.1.617.2 என்று அழைக்கப்படுகிறது, 2020 அக்டோபரில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. ஏஒய்.4.2 வைரஸின் ஸ்பைக் புரதத்தில் ஏ222வி மற்றும் ஒய்145ஹெச். என இரண்டு வகையான உருமாற்றம் தென்படுவதாக கூறப்படுகிறது.
பிரிட்டனில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 96 சதவீதம் பேருக்கும், டென்மார்க், ஜெர்மனியில் ஒரு சதவீதம் பேருக்கும் இருக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் பரவியுள்ளது.
பிரிட்டன் சுகாதாரத்துறையின் கூற்றுப்படி ஏஒய்.4.2 வைரஸ் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஆபத்து குறித்து முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், டெல்டா வைரஸ்களைவிட 15 சதவீத வேகத்துடன் பரவும் தன்மை கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்த வகை வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி செயல்பாடு குறைவாகத்தான் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. ஏஒய்.4.2 வைரஸ் குறித்து அறிய பிரிட்டன் மருத்துவ வல்லுநர்கள், ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் வருகிற 20-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்
-
விருதுநகரில் அ.தி.மு.க.தான் போட்டி: ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்
16 Nov 2025விருதுநகர் : விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் அ.தி.மு.க.தான் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
-
மகிளா வங்கியை மூடிய பா.ஜ.க. அரசு: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
16 Nov 2025சென்னை : பெண்கள் பொருளாதார வலிமை பெற, காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகிளா வங்கியை மத்திய பா.ஜ.க.
-
சபரிமலை கோவில் சன்னிதானத்தில் கேமரா, செல்போன்களுக்கு தடை : இந்த ஆண்டு முதல் அமல்
16 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலை சன்னிதானத்தில் இந்த ஆண்டு முதல் கேமரா, செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று கொடியேற்றம்
16 Nov 2025திருச்சானூர் : திருப்பதியை அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது.
-
தமிழ் பட பாடலை பாடிய பீகாரின் இளம் எம்.எல்ஏ.
16 Nov 2025பாட்னா : பீகாரின் இளம் சட்டப்பேரவை உறுப்பினர் நடிகர் அஜித் படத்தின் பாடலைப் பாடியுள்ளார்.
-
மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை என் தந்தை காப்பாற்றுவார்: நிதிஷ் மகன் நிஷாந்த் உறுதி
16 Nov 2025பாட்னா : மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, பீகாரை முன்னேற்ற பாதைக்கு தனது தந்தை அழைத்துச் செல்வார் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் கூறி
-
மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம்
16 Nov 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் மதுரை ஏ.சி. அணியினர் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றனர்.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆண்பாவம் பொல்லாதது படக்குழு
17 Nov 2025டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2025.
17 Nov 2025 -
சிசு படத்தின் 2-ஆம் பாகம் ரோட் டு ரிவெஞ்ச்
17 Nov 2025ஜல்மாரி லாண்டர் இயக்கத்தில் இம்மாதம் 21 ந்தேதியன்று வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ரோட் டு ரிவெஞ்ச்’.
-
காந்தா திரைவிமர்சனம்
17 Nov 20251950களின் காலக்கட்டத்தில் சேலம் மாடன் ஸ்டுடியோவில் பிரபல நடிகர் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக்க் கொண்டு உருவ
-
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவிமர்சனம்
17 Nov 2025பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், தன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
-
கும்கி 2 திரைவிமர்சனம்
17 Nov 2025நாயகன் மதி, மலை காட்டில் குழியில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றி வளர்க்கிறார். அந்த யானை ஒருநாள் திடீரென்று மாயமாகி விடுகிறது.
-
உண்மை சம்பவத்தை சொல்லும் தீயவர் குலை நடுங்க
17 Nov 2025அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’.
-
துணைவேந்தர்கள் நியமன மசோதா விவகாரம்: தமிழ்நாடு அரசின் அப்பீல் மனு டிச.2க்கு ஒத்திவைப்பு
17 Nov 2025சென்னை, துணைவேந்தர்கள் நியமன மசோதா தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு டிச.2க்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: வரும் 24-ம் தேதி கொடியேற்றம்
17 Nov 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பயன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Nov 2025சென்னை, ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனா் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நவ. 26ல் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவரங்கத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
17 Nov 2025அரச்சலூர், சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவரங்கத்தை நவ.26ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
நாட்டிலேயே சிறந்த பொதுப்போக்குவரத்து: சென்னை போக்குவரத்து கழகம், மெட்ரோ நிறுவனத்திற்கு விருது: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் வாழ்த்து
17 Nov 2025சென்னை, நாட்டிலேயே சிறந்த பொதுப்போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரமாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விருதுகளை முதல்வர் மு
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு
17 Nov 2025மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றம்
17 Nov 2025செம்பரம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து1,200 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
17 Nov 2025சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.


