எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கருவுறும் விகிதம் முதன்முறையாக வழக்கமான அளவுக்கும் கீழே சென்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 2050ம் ஆண்டு காலகட்டத்தில் இன்னும் 23 கோடி மக்கள் அதிகமாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.இதனிடையே, இந்திய அரசாங்கம் பல காலமாக மக்கள் தொகையை கட்டுப்படுத்த போராடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலகிலேயே முன்னோடியாக 1952 ஆம் ஆண்டில், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்தியா.
2027ம் ஆண்டில் உலகின் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால், 1950ம் ஆண்டு காலகட்டத்தில் 5.9 இருந்த கருவுறும் விகிதம், இன்று 2.0 குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.இந்த விஷயம் சற்று முரண்பாடாக உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கருவுறும் விகிதம் முதன்முறையாக வழக்கமான அளவுக்கும் கீழே சென்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2019-2021ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல ஆய்வு (என்.எச்.எப்.எஸ்), அருணாச்சலப்பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கார், அரியானா, ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், டெல்லி, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டது.
நவீன கருத்தடை முறைகள் அதிகம் பயன்பாட்டில் இருப்பதால் வழக்கமான அளவுக்கும் கீழே சென்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஆய்வின் மூலம் வெளிவந்துள்ள தகவல்கள் வருமாறு., நாட்டின் மொத்த கருவுறும் விகிதம் 2.2விலிருந்து 2.0ஆக சரிந்துள்ளது. மிகக்குறைந்த அளவாக சண்டிகர் மாநிலத்தில் 1.4 ஆகவும் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 2.4 ஆகவும் உள்ளது. கருத்தடை பரவல் விகிதம் 54 சதவீதத்திலிருந்து 67 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் பிரசவம் நடக்கும் விகிதம் 79 சதவீதத்தில் இருந்து 89 சதவீதமாக அதிகரித்துள்ளது. புதுச்சேரி மற்றும் தமிழகம் 100 சதவீதத்துடன் முன்னிலை வகிக்கிறது. 12-23 மாதக் குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பூசிகள் செலுத்தும் விகிதத்தில் ஒடிசா மாநிலம் 90 சதவீதம் செலுத்தி முன்னிலை வகிக்கிறது.3.1 சதவீத திருமணமான பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் உடல்ரீதியான வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். 1.5 சதவீத இளம்பெண்கள்(18-29 வயது) உடல்ரீதியான வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். 6 மாதக் கைக்குழந்தைகளுக்கு பாலூட்டும் விகிதம் 55 சதவீதத்திலிருந்து 64 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இரத்தசோகை பாதிப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. கருவுற்ற தாய்மார்களுக்கு 6 மாதத்திற்கு இரும்புச்சத்து மாத்திரைகள் சீராக விநியோகிக்கப்பட்டு வந்த நிலையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் 100 பேரில் 50 பேருக்கு இரத்த சோகை பாதிப்பு உள்ளது. என அதில் கூறப்பட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது சென்னை போலீசார் நடவடிக்கை
23 Jun 2025சென்னை, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை - நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-06-2025.
23 Jun 2025 -
தாம்பரத்தில் ரயிலை ஓட்டிச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு
23 Jun 2025சென்னை, தாம்பரத்தில் ரயிலை ஓட்டிச் செல்ல முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு நிலவியது.
-
வால்பாறைக்கு இடைத்தேர்தலா ? தேர்தல் ஆணையம் விளக்கம்
23 Jun 2025சென்னை, வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
ஈரான் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர்வு
23 Jun 2025புதுடெல்லி : ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று (ஜூன் 23) உயர்ந்துள்ளது.
-
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்
23 Jun 2025திருட்டு தொழில் செய்யும் நாயகன் வைபவ் மற்றும் அவரது நண்பர் மணிகண்ட ராஜேஷ், இருவரையும் 2 கோடி பணத்திற்காக தாதா சிஹான் ஹூசைனி துரத்துகிறார்.
-
கார் டயரில் சிக்கி தொண்டர் பலி: ஜெகன் மோகன் மீது வழக்குப்பதிவு
23 Jun 2025அமராவதி, கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த விவகாரத்தில், ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட தமிழ்நாட்டில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
23 Jun 2025சென்னை, தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
டி.என்.ஏ. திரை விமர்சனம்
23 Jun 2025அதர்வா மனைவி நிமிஷா சஜயனுக்கு பிறக்கும் குழந்தை சில நிமிடங்களில் மாற்றப்பட்டு கடத்தப்படுகிறது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் குழந்தை கடத்தப்படவில்லை என்கிறது.
-
குபேரா திரை விமர்சனம்
23 Jun 2025அரசின் ஒரு திட்டத்தை அபகரிக்க நினைக்கும் தொழிலதிபர் ஒருவர், ஒரு லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு லஞ்சமாக கொடுத்து கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சிக்கிறார்.
-
நிபந்தனையற்ற போர்நிறுத்தம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனாவின் தீர்மானம் நிறைவேறுமா?
23 Jun 2025தெஹ்ரான், ஐ.நா.
-
விக்ரம் பிரபு நடிக்கும் லவ் மேரேஜ்
23 Jun 2025அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திர
-
தமிழ்நாட்டில் எப்போதும் சிங்கள் என்ஜின் தான்: அமைச்சர் ரகுபதி பேட்டி
23 Jun 2025புதுக்கோட்டை, தமிழ்நாட்டில் எப்போதும் சிங்கள் என்ஜின் தான். ஒரே இயக்குபவர் தான் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது: நீட் தேர்வுமுறையே ஒரு ஊழல்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
23 Jun 2025சென்னை, நீட் தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும், முறைகேடுகளும்தான் என்று குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுமுறையே ஒரு ஊழல்தான
-
காவலர்கள் பதவி உயர்வு உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
23 Jun 2025சென்னை, 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் குட் டே படம்
23 Jun 2025பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடித்துள்ள படம் குட் டே.
-
ஈரான் ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் இடைவிடாது ஒலித்த சைரன்
23 Jun 2025டெல் அவிவ், இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் புதிதாக ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் பல நகரங்களில் ஓயாமல் சைரன் சத்தங்கள் ஒலிக்கின்றன.
-
தாக்குதல் திட்டம் எதிரொலி: அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
23 Jun 2025ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
-
தென்காசி முதியோர் காப்பக விவகாரம்; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
23 Jun 2025தென்காசி, தென்காசி முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை விவகாரத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்தது.
-
ஈரானுக்கு உதவ தயார்: ரஷ்யா அறிவிப்பால் மேலும் பதற்றம்
23 Jun 2025மாஸ்கோ : ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
-
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு தாக்கல்
23 Jun 2025சென்னை : மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க
-
ஈரானில் 6 விமான நிலையங்கள் மீது தாக்குதல்: 15 போர் விமானங்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு
23 Jun 2025டெல் அவிவ் : ஈரானில் உள்ள 6 ராணுவ விமான நிலையங்களைத் தாக்கியதுடன், 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது.
-
ஆபரேஷன் சிந்து: இஸ்ரேலில் இருந்து மேலும் இந்தியர்கள் 160 பேர் மீட்பு
23 Jun 2025ஜெருசலேம், 'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கை மூலம் இஸ்ரேலில் இருந்து மேலும் 160 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
-
ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி
23 Jun 2025மாஸ்கோ : இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புதினை ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்து பேசினார்.
-
புதுச்சேரி அமைச்சர் சென்ற கார் விபத்தில் சிக்கியது
23 Jun 2025புதுக்கோட்டை : புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் அதிர்ஷ்டவசத்தில் அவர் உயிர் தப்பினார்.