எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருச்சி : திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளதால், நகரின் மற்ற பகுதிகளிலிருந்து குடியிருப்பு வாசிகள் துண்டிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் திருச்சி வழியாக செல்லும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆறுகளை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் திருச்சியில் சராசரியாக 34 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. இருப்பினும், கருமண்டபம், தீரன் நகர், பிராட்டியூர், வயலூர் சாலை, குழுமணி சாலை, உறையூர் உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கின. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தண்ணீர் தேங்கி நின்ற பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர விரும்பாமல் தங்களுடைய வீடுகளிலேயே தஞ்சம் புகுந்த சுமார் 4 ஆயிரம் குடியிருப்பு வாசிகளுக்கு கோ அபிஷேகபுரம் மண்டல அலுவலகத்தில் உள்ள பொது சமையலறையில் திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி குடமுருட்டி ஆற்றில் சுமார் 25,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் உறையூர், வயலூர் சாலைப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நிரம்பி வழியும் கோரையாற்றில் பஞ்சப்பூர் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதேபோல், மணப்பாறை மற்றும் பொன்னனியாற்றில் இருந்து உபரி நீரை சேகரிக்கும் அரியாறு நிரம்பி வழிந்து புறநகரில் உள்ள தீரன் நகர் மற்றும் பிராட்டியூர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி, கருமண்டபத்தில் உள்ள கொல்லங்குளம் குளத்து நீர், கோரையாற்றில் கலந்ததால் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும், வார்டு 60-ல் உள்ள செல்வம் நகர், லிங்கம் நகர், வின்ஸ் அன்பு அவென்யூ ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய குழுமணி சாலையில் வசிக்கும் மக்கள், திருச்சி மாநகராட்சியின் அவல நிலை குறித்து குற்றம் சாட்டுகின்றனர். வடிகால் வாய்க்கால்களில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளே வெள்ளத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. உபரி நீரை வெளியேற்ற, வாய்க்கால்களை தூர்வார தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


