முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு குமரி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

தற்போது வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்றது. இது வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

இதன் எதிரொலியால், தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை (5-ம் தேதி): சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். 6-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.

7-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். 6, 7 தேதிகளில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் ஆயிக்குடி (தென்காசி) 8 செ.மீ., சேரன்மாதேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து