எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று தைப்பூச திருவிழா பக்தர்களின்றி களையிழந்து காணப்பட்டது. குறிப்பாக, திருச்செந்தூர், பழனியில் பக்தர்கள் கூட்டம் திரளாக காண்ப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் தைப்பூச திருவிழா பக்தர்களின்றி எளிமையாக நடந்தது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று தைப்பூச திருவிழா நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் என அனைத்து நிகழ்வுகளும் ஆகம விதிப்படி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
வழக்கமாக தைப்பூசத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தம் வழிபாடு நடத்துவது வழக்கம். நேற்று காலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து விடலை கோவில் பிள்ளையார் சன்னதி வரை வந்து கோபுரத்தை நோக்கி கும்பிட்டு சாமி தரிசனம் செய்து சென்றனர். தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் கோயில் வளாகத்துக்கு வந்து விடாமல் இருப்பதற்காக கோவில் நுழைவு வாயில் டோல் கேட்டில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பழனி
முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாதயாத்திரைக்குப் புகழ்பெற்ற தைப்பூசத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கும் முன்னரே மதுரை, கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனியை நோக்கி பக்தர்கள் பாதயாத்திரையாக செல்ல தொடங்கினர். தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. (நேற்று ) தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் திரண்டனர். மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதியில்லாததால் மலையடிவாரம் வந்த பக்தர்கள் கிரிவீதிகளில் மலையைச் சுற்றிவந்து அடிவாரம் பாதவிநாயகர் கோயிலில் வழிபட்டனர். இதனால் கிரிவீதிகள் முழுவதும் பக்தர்கள் கூட்டமாகக் காணப்பட்டது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவடி எடுத்து கிரிவீதிகளில் ஆடிவந்தனர். பலர் முகத்தில் அலகு குத்தி வேலுடன் வந்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். பழனி சண்முக நதியில் பக்தர்கள் திரளாக முடிகாணிக்கை செலுத்தியதால் நதிக்கரையோரம் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பழனி மலைக்கோயில் அடிவாரம், இடும்பன்கோயில், சன்னதி வீதி, சண்முக நதி, பெரியநாயகிம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் எங்கு நோக்கினும் காவி உடை அணிந்த பக்தர்கள் திரளாகக் காணப்பட்டனர். பழனி நகரமே பக்தர்கள் கூட்டத்தால் விழாக்கோலம் பூண்டிருந்தது.
தைப்பூச விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற முகக்கவசம் அணியாத பக்தர்களுக்கு இலவசமாக முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வைக்கப்பட்டிருந்த உணவு பாதுகாப்பானதாக உள்ளதா என உணவுப் பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தினர். தைப்பூச விழாவிற்குப் பல ஆண்டுகளாகப் பாதயாத்திரையாக பழனிக்கு வரும் பக்தர்கள், முதன்முறையாக இந்த ஆண்டுதான் மலைக்கோயில் மேல் உள்ள தண்டாயுதபாணி சுவாமியை தரிசிக்காமல் ஊர் திரும்புகிறோம் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.
குன்றம்
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் வாசலில் நின்று கோவில் நுழைவாயிலில் உள்ள கதவு முன்பு நின்று வேல் முற்றும் மயிலுக்கு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
மருதமலை
மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாததால் கோவிலின் அடிவாரத்தில் வெளியே நின்று தரிசனம் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 6 hours ago |
ஆனியன்ப்ரை5 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார
-
மேற்குவங்க கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? - பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி
12 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ள
-
கிராண்ட் செஸ் டூர் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
12 May 2024வார்சா : கிராண்ட் செஸ் டூர் தொடரில் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தின் பிரக்ஞானந்தா.
3 பேர் பங்கேற்பு...
-
சோப்ராவுக்கு வெள்ளிப்பதக்கம்
12 May 2024கத்தார் தலைநகர் தோகாவில் 'டைமண்ட் லீக்' போட்டி நடைபெறுகிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி : பிளே ஆப் சுற்றில் நீடிக்கிறது
12 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன
-
தமிழகத்தில் கஞ்சா வணிகத்தை தடுக்க நேர்மையாக செயல்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 May 2024சென்னை, கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
13 May 2024 -
குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'
13 May 2024குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' படம் பற்றி இயக்குநர் ராம் கந்தசாமி கூறியதாவது.