எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீரங்கம் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீரங்கா கோஷம் விண்ணதிர பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் தங்க கருடன், யாழி, கற்பக விருட்சம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து 7-ம் திருநாளான கடந்த புதன்கிழமை நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருவிகையில் நெல்லளவு கண்டருளினார். அதன் பிறகு ஆழ்வார் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை சென்றடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளி நள்ளிரவு ஒரு மணிக்கு கண்ணாடி அறையை அடைந்தார்.
8-ம் திருநாளான நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்க விலாஸ் மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் ரெங்க விலாஸ் மண்டபத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சித்திரை தேர் அருகே வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.45 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தேருக்கு புறப்பட்டு 5.15 மணிக்கு சித்திரை தேர் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார். காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் தேரில் மேஷ லக்னத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஸ்ரீரங்கா கோஷம் விண்ணதிர பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அவர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை முட்டியது. கீழச்சித்திரை வீதியில் இருந்து புறப்பட்ட தேர் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதி ஆகிய நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து நிலையை சென்றடைந்தது. தேர் நிலைக்கு வந்த பின் நம்பெருமாள் ரேவதி மண்டபம் சேர்ந்தார். தேரோட்டத்தையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தஞ்சை களிமேடு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு நிகழ்ந்த தீ விபத்து சம்பவத்தையடுத்து தேர் செல்லும் வழிநெடுகிலும் உள்ள மின் வயர்கள் மற்றும் மரக்கிளைகள் ஏதேனும் இடையூறாக இருக்கிறதா? என ஆய்வு செய்ய மின்வாரியம், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய தனி சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தேரோட்டம் தொடங்கும் முன்பாக காலை 6 மணி முதல் 11 மணி வரை அந்த பகுதியில் மின் தடை அமல்படுத்தப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சித்திரை தேரோட்டம் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அச்சமின்றி அலை கடலென திரண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தன. ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இன்று (சனிக்கிழமை) திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சியும், இரவு சப்தா வரணம் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறுகிறது. நாளை (1-ம் தேதி) ஆளும் பல்லக்குடன் ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
நடிகை மனோரமா மகன் பூபதி மறைவு
23 Oct 2025சென்னை, மனோரமா மகன் பூபதி நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-10-2025.
23 Oct 2025 -
இன்று முகூர்த்த தினம் எதிரொலி: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
23 Oct 2025சென்னை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
-
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் சட்டப்பேரவையில் தவறான தகவல்: அமைச்சர் மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு
23 Oct 2025சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று சட்டமன்றத்தில் தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அ.தி.மு.க.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
-
முதல் முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிப்பு
23 Oct 2025ரேக்ஜாவிக், ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து இழந்துள்ளது .
-
நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வருகை தமிழக அரசின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை
23 Oct 2025டெல்லி: நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து உயர்வு: குளிக்க - பரிசல் இயக்க தடை
23 Oct 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர்
23 Oct 2025சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
தொடர் சரிவில் தங்கம் விலை
23 Oct 2025சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையானது.
-
டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுன்ட்டர்
23 Oct 2025புதுடெல்லி, பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் 30-ம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
23 Oct 2025சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு உள்ள தேவர் சிலைக்கு
-
வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி
23 Oct 2025சென்னை, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
-
பீகார் சட்ட சபை தேர்தல்: இன்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு
23 Oct 2025பாட்னா, பீகார் தேர்தலில் இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.
-
தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக திருப்பதியில் ரூ.4 லட்சம் மோசடி
23 Oct 2025திருப்பதி, திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்ற நிலையில், இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ.யின் எப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் தாக்கல்
23 Oct 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
புகாரின் மீது வழக்குப்பதியாமல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து
23 Oct 2025மதுரை: புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரை கி
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
23 Oct 2025சென்னை, வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது.
-
தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல்: மத்திய அரசுக்கு நயினார் நன்றி
23 Oct 2025சென்னை, தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து நயினார் நாகேந்திரன் வரவேற்பு அளித்துள்ளார்.
-
வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
23 Oct 2025சென்னை: வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
23 Oct 2025கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
ஆசியான் உச்சி மாநாடு: காணொளி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு
23 Oct 2025புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாடுட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்கிறார்.
-
ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா
23 Oct 2025அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.
-
நிவாரண பணிகள் பற்றி பேச அருகதையில்லை: இ.பி.எஸ். மீது அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
23 Oct 2025சென்னை: நிவாரண பணிகள் பற்றி பேச இ.பி.எஸ்-க்கு அருகதை இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
தூய்மை பணியாளர்களுக்கு தினசரி இலவச உணவு: முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த தமிழக அரசாணை வெளியீடு
23 Oct 2025சென்னை: முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.


