தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

23 வயதுக்குட்பட்டோருக்கான 5 நாடுகள் பங்கேற்கும் யூனிபர் யூனிபர் யு-23 ஹாக்கி போட்டிகள் அயர்லாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஹாக்கி தொடரில் பங்கேற்க, இந்திய ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணி அயர்லாந்து சென்றுள்ளது. இப்போட்டியின் லீக் சுற்றில் இந்திய அணி அயர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் உக்ரைன் அணிகளுடன் விளையாடுகிறது. யூனிபர் யு-23 ஹாக்கி போட்டி தொடரில், நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது.
மேலும், மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2021க்குப் பிறகு, அயர்லாந்து அணியை மீண்டும் எதிர்கொண்டது. இப்போட்டியில், இந்திய ஜூனியர் பெண்கள் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியை அபாரமாக வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து, நடைபெறும் ஆட்டத்தில், நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. அதன்பிறகு ஜூன் 22-ம் தேதி உக்ரைனை எதிர்கொள்கிறது. லீக் சுற்று முடிவில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.இறுதிப் போட்டி ஜூன் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.
ரிஷப் பண்ட் உடற்தகுதி குறித்து முன்னாள் பாக். வீரர் விமர்சனம்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் ரிஷப் பண்ட் கேப்டன்சி குறித்து பலர் விமர்சனம் செய்தனர். இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. குறிப்பாக அவர் கேப்டன் பொறுப்பை ஏற்ற காரணத்தால் அவர் தனது தனிப்பட்ட பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திணறி வருவதாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ளார்.
பண்ட் குறித்து அவர் கூறுகையில், " நான் அவருடைய விக்கெட் கீப்பிங் பற்றி விவாதிக்க விரும்புகிறேன். நான் ஒரு விஷயத்தை உணர்ந்து கொண்டேன். வேகப்பந்து வீச்சாளர் பந்துவீசும்போது, அவர் மிகவும் தாழ்வாக குனிந்து அமரமாட்டார். அவர் அதிக எடை கொண்டவராகத் தோன்றுகிறார். மேலும் அவரது மொத்த எடை அவர் விரைவாக உயரும் திறனைக் கட்டுப்படுத்துகிறது. இது அவரது உடற்தகுதி குறித்த கேள்வியை எழுப்புகிறது. ரிஷப் பந்த் முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா? " என தெரிவித்தார்.
ஒரு தொடரை வைத்து ருதுராஜை குறைவாக மதிப்பிடுவதா? டிராவிட்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட், 5 ஆட்டங்களில் ஒரு அரை சதத்துடன் 96 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 131.50. இதனால் அவருடைய பேட்டிங் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. ருதுராஜூக்கு ஆதரவாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியதாவது.,
ஒரு தொடரில் விளையாடுவதை வைத்து வீரர்களை மதிப்பிடுவதை நான் விரும்ப மாட்டேன். வாய்ப்பு கிடைத்த அனைவரும் அதற்குத் தகுதியானவர்கள். டி20 கிரிக்கெட்டில் சில நல்ல ஆட்டங்களும் மட்டுமல்லாமல் சில மோசமான ஆட்டங்களும் அமையும். ஒரு இன்னிங்ஸில் தன்னிடம் உள்ள திறமையை நன்கு வெளிப்படுத்தினார் ருதுராஜ் கெயிக்வாட். டி20 கிரிக்கெட்டில் சிலசமயம் ரன்கள் எடுக்க முடியாத நிலை ஏற்படும். எந்த வீரரின் பங்களிப்பிலும் நாங்கள் ஏமாற்றம் அடையவில்லை. நேர்மறை எண்ணங்களுடன் அதிரடியாக விளையாடவே நாங்கள் எண்ணினோம். அதை முயலும்போது எப்போதும் சாதகமான முடிவுகள் கிடைக்காது என்றார்.
'சபாஷ் மித்து' படம்: டிரெய்லர் வெளியீடு
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல வீராங்கனை மிதாலி ராஜ் சமீபத்தில் அறிவித்தார். இந்திய மகளிர் அணிக்காக 12 டெஸ்டுகள், 232 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக இந்திய அணி பங்கேற்ற 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் விளையாடினார். 2019 டிசம்பர் 3, மிதாலி ராஜின் பிறந்த நாளன்று அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. சபாஷ் மித்து என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டது.
இந்த வருடம் பிப்ரவரி 4 அன்று படம் வெளிவருவதாக இருந்தது. பிறகு வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சபாஷ் மித்து படம், ஜூலை 15 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சபாஷ் மித்து படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது. டெஸ்டில் 1 சதமும் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 சதங்களும் எடுத்துள்ளார் மிதாலி ராஜ். அதேபோல டெஸ்டில் 4 அரை சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 64 அரை சதங்களும் டி20யில் 17 அரை சதங்களும் எடுத்துள்ளார். தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ராஜ், ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஹைதராபாத்துக்கு இடம்மாறியது குறிப்பிடத்தக்கது.
50% டிக்கெட் பணம் தரப்படும்: கர்நாடகா கிரிக்கெட் சங்கம்
இந்தியா தென்னாப்பிரிகாவுக்கு இடையேயான 5வது கடைசியான முக்கியமான போட்டி பெங்களூருவிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்திய அணி பேட்டிங் விளையாடிக்கொண்டிருந்த போது 3.3 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்படது. இரவு முழுவதும் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்தத் தொடர் 2-2 என்ற சமநிலையில் இருந்ததால் இந்தப் போட்டியை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
“இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான 5வது டி20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். விதிமுறைகளின்படி கிரிக்கெட்டில் ஒரு பந்து வீசினாலும் டிக்கெட் பணம் திருப்பித் தரப்படமாட்டாது. இருப்பினும் கேஎஸ்சிஏ கிரிக்கெட் ரசிகர்களுக்காக டிக்கெட் பணத்தில் 50 சதவிகித பணத்தை திருப்பித்தர இருக்கிறது. அசல் டிக்கெட்டை கொண்டுவந்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதற்கான நடைமுறைகள் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்” என கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.
பயிற்சியாளரா? கேப்டனா? ஷகிப் அல் ஹசன் மறுப்பு
வங்க தேசம் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ. அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. வங்க தேச அணியில் கேப்டன் ஷகிப் மட்டும் முதல் இன்னிங்ஸில் 51, இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்களும் எடுத்தார். இருப்பினும் மற்ற வீரர்களின் மோசமான பேட்டிங் காரணமாக முதல் டெஸ்ட் போட்டி தோல்வியில் முடிவடைந்தது. இதைக் குறித்து ஷகிப் அல் ஹசன் கூறியதாவது:
இந்தப் போட்டியில் நான் அதிகமாக எதுவும் எதிர் பாரக்கவில்லை. ஆனால், எங்களால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என நம்புகிறேன். முதல் இன்னிங்ஸில் மிகவும் குறைவான ரன் எடுத்ததால் ஆட்டம் மிகவும் பாதித்தது. எங்களிடம் மிகவும் டெக்கினிக்கலாக விளையாடும் வீரர்கள் குறைவு. எல்லோருக்கும் டெக்கினிக்கல் பிரச்சனை இருக்கிறது. இருப்பினும் அவர்களது குறையை கண்டறிந்து சமாளித்து விளையாட வேண்டும். இது ஒருவரின் தனிப்பட்ட இடத்திலிருந்து வர வேண்டும். மேலும் இது பயிற்சியாளரின் வேலை. என்னால் ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 3 days 6 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 6 days 7 hours ago |
பாசி பருப்பு பாயாசம்![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-07-2022.
01 Jul 2022 -
சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகே ஹாங்காங்கிற்கு ஜனநாயகம் துவங்கியது : சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு
01 Jul 2022பெய்ஜிங் : சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
-
கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் கலை கல்லூரிகளில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பம்
01 Jul 2022சென்னை : தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதும் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 163 அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன.
-
உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் ஆயுத உதவி: ஜோபைடன்
01 Jul 2022வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
-
வெங்கையா நாயுடு பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து
01 Jul 2022சென்னை : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க 23 நடமாடும் வாகனங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின் : 8 துணை இயக்குனர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார்
01 Jul 2022சென்னை : சென்னை, நொச்சிக்குப்பத்தில் காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025 என்ற இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65
-
தடய அறிவியல் துறை பயன்பாட்டிற்காக 14 நடமாடும் ஆய்வக வாகனங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் : சர்வதேச தரச் சான்றிதழ் பெற்றதற்கும் வாழ்த்து
01 Jul 2022சென்னை : சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமா
-
தஞ்சை மியூசியத்தில் இருந்து காணாமல் போன 300 வருட பழமையான புராதன பைபிள் லண்டலின் கண்டுபிடிப்பு
01 Jul 2022லண்டன் : தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருந்து காணாமல் போன தமிழில் முதலில் மொழி பெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
தொழில் புரிய ஏதுவான மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 3-வது இடம் : டுவிட்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
01 Jul 2022சென்னை : தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் தமிழகம் 3-வது இடத்தை பெற்றதற்காக தொழில் துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்
-
தேசிய மருத்துவர்கள் தினம் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2022சென்னை : தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் 14 மணி நேர மின்வெட்டு: இணையதள சேவைகள் முடங்கும் அபாயம்
01 Jul 2022கராச்சி : பாகிஸ்தானில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் 14 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் உயர் தொழில் நுட்ப பூங்கா அமைக்க சிங்கப்பூர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
01 Jul 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில், சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ஐ.ஜி.எஸ்.எஸ்.
-
உள்கட்சி தேர்தல்: நிர்வாகிகளுடன் பிரேமலதா 4-ம் தேதி ஆலோசனை
01 Jul 2022சென்னை : தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வருகிற 4-ம் தேதி நடைபெறுகிறது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.
-
4-ம் தேதி சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ஏற்பாடு : கோவை, மதுரையில் உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள்: அமைச்சர் பேட்டி
01 Jul 2022சென்னை : வரும் 4-ம் தேதி சென்னையில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
-
டுவிட்டரில் தனது கட்சி பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி
01 Jul 2022சென்னை : அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சி பொறுப்பை தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் அ.தி.மு.க தலைமை நிலையச்செயலாளர் என்று மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
சர்ச்சை பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது: நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் : வழக்குகளை மாற்றக்கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டனம்
01 Jul 2022புதுடெல்லி : முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் நுபுர் சர்மா பேசியது நாடு முழுவதும் முஸ்லிம்களை வெகுண்டெழச் செய்துள்ளது.
-
சிங்கப்பூரில் கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட "ஜில்" பீர் : குடிமகன்கள் வரவேற்பு
01 Jul 2022கோலாலம்பூர் : சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து தயாரிக்கப்படும் பீருக்கு மதுபிரியர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
-
மீண்டும் வர்ணனைக்கு திரும்பிய ரவி சாஸ்திரி
01 Jul 2022இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் 2021 டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது.
-
வெள்ளப் பெருக்கு குறைந்ததால் குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
01 Jul 2022தென்காசி : குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.
-
தி.மு.க. அரசை கண்டித்து 5-ம் தேதி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. உண்ணாவிரதம்
01 Jul 2022சென்னை : தி.மு.க.
-
செஸ் ஒலிம்பியாட் வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Jul 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, காமராஜர் சாலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வக
-
பாவோ நூர்மி ஈட்டி எறிதல் போட்டி: புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா
01 Jul 2022ஸ்டாக்ஹோம் : பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் 89.30 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனை படைத்திருந்தார்.
-
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை : நிரந்தர பணி நியமனம் செய்வதில் என்ன பிரச்சினை என கேள்வி
01 Jul 2022மதுரை : ஆசிரியர்கள் நியமனம் மாணவர்களின் நலன் சார்ந்தது என்ற தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்
-
பெரும்பான்மையை நிரூபிக்கிறார் ஷிண்டே: மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் ஜூலை 4-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு
01 Jul 2022மும்பை : பா.ஜ.க ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 4-ம் தேதி (வரு
-
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jul 2022சென்னை : காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.