எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

23 வயதுக்குட்பட்டோருக்கான 5 நாடுகள் பங்கேற்கும் யூனிபர் யூனிபர் யு-23 ஹாக்கி போட்டிகள் அயர்லாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஹாக்கி தொடரில் பங்கேற்க, இந்திய ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணி அயர்லாந்து சென்றுள்ளது. இப்போட்டியின் லீக் சுற்றில் இந்திய அணி அயர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் உக்ரைன் அணிகளுடன் விளையாடுகிறது. யூனிபர் யு-23 ஹாக்கி போட்டி தொடரில், நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது.
மேலும், மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2021க்குப் பிறகு, அயர்லாந்து அணியை மீண்டும் எதிர்கொண்டது. இப்போட்டியில், இந்திய ஜூனியர் பெண்கள் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியை அபாரமாக வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து, நடைபெறும் ஆட்டத்தில், நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. அதன்பிறகு ஜூன் 22-ம் தேதி உக்ரைனை எதிர்கொள்கிறது. லீக் சுற்று முடிவில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.இறுதிப் போட்டி ஜூன் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.
ரிஷப் பண்ட் உடற்தகுதி குறித்து முன்னாள் பாக். வீரர் விமர்சனம்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் ரிஷப் பண்ட் கேப்டன்சி குறித்து பலர் விமர்சனம் செய்தனர். இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. குறிப்பாக அவர் கேப்டன் பொறுப்பை ஏற்ற காரணத்தால் அவர் தனது தனிப்பட்ட பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திணறி வருவதாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ளார்.
பண்ட் குறித்து அவர் கூறுகையில், " நான் அவருடைய விக்கெட் கீப்பிங் பற்றி விவாதிக்க விரும்புகிறேன். நான் ஒரு விஷயத்தை உணர்ந்து கொண்டேன். வேகப்பந்து வீச்சாளர் பந்துவீசும்போது, அவர் மிகவும் தாழ்வாக குனிந்து அமரமாட்டார். அவர் அதிக எடை கொண்டவராகத் தோன்றுகிறார். மேலும் அவரது மொத்த எடை அவர் விரைவாக உயரும் திறனைக் கட்டுப்படுத்துகிறது. இது அவரது உடற்தகுதி குறித்த கேள்வியை எழுப்புகிறது. ரிஷப் பந்த் முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா? " என தெரிவித்தார்.
ஒரு தொடரை வைத்து ருதுராஜை குறைவாக மதிப்பிடுவதா? டிராவிட்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட், 5 ஆட்டங்களில் ஒரு அரை சதத்துடன் 96 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 131.50. இதனால் அவருடைய பேட்டிங் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. ருதுராஜூக்கு ஆதரவாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியதாவது.,
ஒரு தொடரில் விளையாடுவதை வைத்து வீரர்களை மதிப்பிடுவதை நான் விரும்ப மாட்டேன். வாய்ப்பு கிடைத்த அனைவரும் அதற்குத் தகுதியானவர்கள். டி20 கிரிக்கெட்டில் சில நல்ல ஆட்டங்களும் மட்டுமல்லாமல் சில மோசமான ஆட்டங்களும் அமையும். ஒரு இன்னிங்ஸில் தன்னிடம் உள்ள திறமையை நன்கு வெளிப்படுத்தினார் ருதுராஜ் கெயிக்வாட். டி20 கிரிக்கெட்டில் சிலசமயம் ரன்கள் எடுக்க முடியாத நிலை ஏற்படும். எந்த வீரரின் பங்களிப்பிலும் நாங்கள் ஏமாற்றம் அடையவில்லை. நேர்மறை எண்ணங்களுடன் அதிரடியாக விளையாடவே நாங்கள் எண்ணினோம். அதை முயலும்போது எப்போதும் சாதகமான முடிவுகள் கிடைக்காது என்றார்.
'சபாஷ் மித்து' படம்: டிரெய்லர் வெளியீடு
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரபல வீராங்கனை மிதாலி ராஜ் சமீபத்தில் அறிவித்தார். இந்திய மகளிர் அணிக்காக 12 டெஸ்டுகள், 232 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக இந்திய அணி பங்கேற்ற 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் விளையாடினார். 2019 டிசம்பர் 3, மிதாலி ராஜின் பிறந்த நாளன்று அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. சபாஷ் மித்து என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டது.
இந்த வருடம் பிப்ரவரி 4 அன்று படம் வெளிவருவதாக இருந்தது. பிறகு வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சபாஷ் மித்து படம், ஜூலை 15 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சபாஷ் மித்து படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது. டெஸ்டில் 1 சதமும் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 சதங்களும் எடுத்துள்ளார் மிதாலி ராஜ். அதேபோல டெஸ்டில் 4 அரை சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 64 அரை சதங்களும் டி20யில் 17 அரை சதங்களும் எடுத்துள்ளார். தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ராஜ், ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஹைதராபாத்துக்கு இடம்மாறியது குறிப்பிடத்தக்கது.
50% டிக்கெட் பணம் தரப்படும்: கர்நாடகா கிரிக்கெட் சங்கம்
இந்தியா தென்னாப்பிரிகாவுக்கு இடையேயான 5வது கடைசியான முக்கியமான போட்டி பெங்களூருவிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்திய அணி பேட்டிங் விளையாடிக்கொண்டிருந்த போது 3.3 ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்படது. இரவு முழுவதும் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்தத் தொடர் 2-2 என்ற சமநிலையில் இருந்ததால் இந்தப் போட்டியை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
“இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான 5வது டி20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். விதிமுறைகளின்படி கிரிக்கெட்டில் ஒரு பந்து வீசினாலும் டிக்கெட் பணம் திருப்பித் தரப்படமாட்டாது. இருப்பினும் கேஎஸ்சிஏ கிரிக்கெட் ரசிகர்களுக்காக டிக்கெட் பணத்தில் 50 சதவிகித பணத்தை திருப்பித்தர இருக்கிறது. அசல் டிக்கெட்டை கொண்டுவந்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதற்கான நடைமுறைகள் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்” என கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.
பயிற்சியாளரா? கேப்டனா? ஷகிப் அல் ஹசன் மறுப்பு
வங்க தேசம் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ. அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. வங்க தேச அணியில் கேப்டன் ஷகிப் மட்டும் முதல் இன்னிங்ஸில் 51, இரண்டாவது இன்னிங்ஸில் 63 ரன்களும் எடுத்தார். இருப்பினும் மற்ற வீரர்களின் மோசமான பேட்டிங் காரணமாக முதல் டெஸ்ட் போட்டி தோல்வியில் முடிவடைந்தது. இதைக் குறித்து ஷகிப் அல் ஹசன் கூறியதாவது:
இந்தப் போட்டியில் நான் அதிகமாக எதுவும் எதிர் பாரக்கவில்லை. ஆனால், எங்களால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என நம்புகிறேன். முதல் இன்னிங்ஸில் மிகவும் குறைவான ரன் எடுத்ததால் ஆட்டம் மிகவும் பாதித்தது. எங்களிடம் மிகவும் டெக்கினிக்கலாக விளையாடும் வீரர்கள் குறைவு. எல்லோருக்கும் டெக்கினிக்கல் பிரச்சனை இருக்கிறது. இருப்பினும் அவர்களது குறையை கண்டறிந்து சமாளித்து விளையாட வேண்டும். இது ஒருவரின் தனிப்பட்ட இடத்திலிருந்து வர வேண்டும். மேலும் இது பயிற்சியாளரின் வேலை. என்னால் ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
14 Jul 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
நடத்தை விதிகளை மீறல்: சிராஜுக்கு ஐ.சி.சி.அபராதம்
14 Jul 2025லார்ட்ஸ் : 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழப்பு
14 Jul 2025காசா முனை : காசாவில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலியாகினர். இதற்கு தொழில்நுட்ப தவறு என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
-
சாய்னா நேவாலின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது
14 Jul 2025ஐதராபாத் : 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதி
14 Jul 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
இந்தியா - சீனா இடையேயான கருத்து பரிமாற்றம் முக்கியம் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
14 Jul 2025பெய்ஜிங் : இந்தியா - சீனா உறவை தொடர்ந்து இயல்புநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் வெளியுறவு
-
அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு-2 பேர் பலி
14 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
உ.பி.யில் கனமழைக்கு 14 பேர் பலி
14 Jul 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழைக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: இந்திய அணி திணறல்
14 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. களத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் உள்ளனர்.
-
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் நடைமுறைக்கு வந்தது 'ப; வடிவ வகுப்பறைகள்
14 Jul 2025சென்னை, தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வருகிறது.