முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 மாதங்களில் இல்லாத அளவுக்கு சிங்கப்பூரில் கொரோனா தொற்று புதிய உச்சம்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      உலகம்
Singapore 2022 06 30

சிங்கப்பூரில் தினசரி கொரோனா தொற்று 3 மாதங்களில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 11,504 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் ஆங் யே குங் கூறுகையில், கொரோனாவில் புதிய அலை எதிா்பாா்த்ததற்கு முன்பே எழுந்து விட்டதாகத் தெரிவித்தார். 

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு இனி வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று துணை பிரதமா் லாரன்ஸ் வாங் எச்சரித்துள்ளார். எனினும், இப்போதைக்கு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டிய தேவையில்லை எனவும் நோய்த்தடுப்பு விதிமுறைகளில் தேவைப்படும் நேரங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து