முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதிகள் தாக்குதல்: கேமரூனில் ராணுவ வீரர் உள்ளிட்ட 5 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      உலகம்
Cameron 2022-08-09

கேமரூன் நாட்டில் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடுகளான கேமரூன், நைஜீரியா, சாட், மாலி மற்றும் நைகர் ஆகிய நாடுகளை ஒன்றினைத்து இஸ்லாமிய மத அடிப்படையிலான அரசை நிறுவும் நோக்கத்தோடு போகோஹரம் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, இந்த பயங்கரவாத குழு பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், கேமரூன் நாட்டின் வடக்கு மாகாணத்தின் கிஸ்மடரி என்ற கிராமம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் போகோஹரம் பயங்கரவாதிகள் சனி, ஞாயிற்றுகிழமைகளில் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது ராணுவ வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து