எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடக்க விழாவில், நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்.மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன்.
இப்போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி தமிழகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் ஏற்கப்பட்டது. இந்த முயற்சியின் மூலம், ஒரே நாளில் அதிகபட்ச நபர்களால் உறுதிமொழி எடுக்கப்பட்டு உலக சாதனை படைத்தமைக்காக World Records Union மற்றும் Asia Book of Records ஆகிய அமைப்புகள் முதல்வரிடம் அதற்கான சான்றிதழ்களை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆகியவற்றை இணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமலாக்கப் பணியகம், குற்றப்புலனாய்வு துறையை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த புதிய பிரிவு உருவாக்கப்பட்டதன் மூலம் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தமிழ்நாடு அரசின் இலக்கை அடைய பெரும் உதவிகரமாக இருக்கும்.
போதை ஒழிப்பு தொடர்பான தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக, நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, தன்னார்வலர்கள் அமலாக்கப் பணியகம், குற்றப்புலனாய்வு துறை இணையதளம் வாயிலாக பங்கேற்கும் 30 மணிநேர விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதன்மூலம், தன்னார்வலர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இணையதளம் வழியாகவும் மற்றும் நேரடியாகவும் தொடர்ந்து 30 மணிநேரம் மேற்கொள்வார்கள்.
பின்னர், அமலாக்கப் பணியகம், குற்றப்புலனாய்வு துறையினால் தயாரிக்கப்பட்டுள்ள போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார குறும்படத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் இவ்விழிப்புணர்வு குறும்படம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்காக திரையிடப்பட்டது.
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடக்க விழாவில், சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து உரையாற்றி, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலேந்திர பாபு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் செந்தில்குமார், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் காத்திகேயன், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குநர் (குற்றம்) மகேஷ்குமார் அகர்வால், காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ராஜகோபால், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே டகைச்சி
21 Oct 2025டோக்கியோ : ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
அமைதி ஒப்பந்தம் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் விருப்பத்தை நிராகரித்த ஈரான் சுப்ரீம் தலைவர் காமேனி
21 Oct 2025இஸ்ரேல் : அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு ட்ரம்ப் விருப்பத்தை ஈரான் சுப்ரீம் தலைவர் காமேனி நிராகரித்தார்.
-
புதுச்சேரிக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்
21 Oct 2025புதுச்சேரி : புதுச்சேரிக்கு 2 நாட்கள் ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
பீகார் தேர்தலில் பின்வாங்கிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
21 Oct 2025பாட்னா : பீகார் தேர்தலில் இருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பின்வாங்கினார்.
-
மகளிர் உலகக் கோப்பை: முதல் அணியாக வெளியேறியது வங்கதேசம்
21 Oct 2025மும்பை : மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
-
இந்திய கேப்டன் வேதனை
21 Oct 2025மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியான தோல்விகள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியுள்ளார்.
-
வங்கதேச எல்லையில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய இந்திய ராணுவத்தினர்
21 Oct 2025கொல்கத்தா : இந்திய ராணுவத்தினர் வங்கதேச எல்லையில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர்.
-
ரிஸ்வான் அதிரடி நீக்கம்: பாகிஸ்தான் அணிக்கு புதிய ஒருநாள் கேப்டன் நியமனம்
21 Oct 2025லாகூர் : ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஷாகீன் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-10-2025.
22 Oct 2025 -
நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
21 Oct 2025புதுடெல்லி : உடல் ஆரோக்கியத்திற்காகவும், வெற்றிக்காகவும் வாழ்த்துகிறேன் என்று நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
-
மகளிர் உலகக்கோப்பை 22வது லீக்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு
21 Oct 2025கொழும்பு : மகளிர் உலகக்கோப்பை 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு தென்ஆப்பிரிக்க அணி 312 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
-
இந்தியா - தெ.ஆ. டெஸ்ட் போட்டி: குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.60
21 Oct 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.60 என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச அளவில் ஒரே நாளில் தங்கம் -வெள்ளி விலை வீழ்ச்சி
22 Oct 2025மும்பை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 6.3% சரிந்தது. இதேபோல் ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி விலையும் நேற்று 8.7% சரிவை சந்தித்தது.
-
ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கு மேல் சரிந்த தங்கம் விலை
22 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையான ந
-
காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்
22 Oct 2025சென்னை, காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் திடீர் பரபரப்பு
22 Oct 2025பத்தனம்திட்டா : ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறப்பு
22 Oct 2025சென்னை : அடையாறு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு
22 Oct 2025சென்னை : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
-
பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனாதிபதி முர்மு சாமி தரிசனம்
22 Oct 2025திருவனந்தபுரம், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
தங்க நகைகளை வீட்டில் எவ்வளவு வைக்கலாம்..? வெளியானது புதிய தகவல்கள்
22 Oct 2025புதுடெல்லி, வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
திருவாரூரில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் ஆய்வு செய்த இ.பி.எஸ்
22 Oct 2025திருவாரூர், திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
-
நெல் மூட்டைகள் தேங்க மத்திய அரசே காரணம்: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
22 Oct 2025தஞ்சாவூர், விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல்
-
புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையால் புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.
-
சோனி, எக்கோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா ஐகோர்ட்டில் மனு
22 Oct 2025சென்னை : சோனி மியூசிக் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பிரபல இசையமைப்பாள
-
லோக்பால் உறுப்பினர்களுக்கு ரூ. 5 கோடியில் சொகுசு கார்கள் வாங்க டெண்டர்
22 Oct 2025மும்பை : ஊழலை ஒழிக்கும் லோக்பால் உறுப்பினர்களுக்கு சொகுசு கார் வாங்கி கொடுப்பதா என சரத்பவார் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.