முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: 30-ம் தேதி மனு தாக்கல் செய்கிறார் சசிதரூர்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      இந்தியா
Sasitharur 2022-09-25

Source: provided

புது டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவை 30-ம் தேதி சசி தரூர் தாக்கல் செய்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

22 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் 17-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தினர் யாரும் போட்டியிட மாட்டார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இப்போது தலைவர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரும் போட்டியிடுவார் என்பது உறுதியாகி உள்ளது. 

அவரது சார்பில் அவரது உதவியாளர் ஆலிம் ஜாவேரி, டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் வேட்பு மனு பெற்றுச் சென்றார். சசிதரூர், 30-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அன்றுதான் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிற ஒருவரின் வேட்புமனுவை 10 பிரதேச காங்கிரஸ் பிரதிநிதிகள் முன் மொழிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து