முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 538 பேருக்கு கொரோனா : தமிழக சுகாதார துறை தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      தமிழகம்
India-Corona 2022 03 15

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று புதிதாக 538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் அதிகபட்சமாக சென்னையில் 110 பேர், செங்கல்பட்டில் 51 பேர், கோவையில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 35,80,439-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 38,046ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 492 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,36,998-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,395 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து