முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் எழுத்தாளருக்கு அறிவிப்பு

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      உலகம்
Aani-Ernaas 2022-10-06

Source: provided

ஸ்டாக்ஹோம்: பிரான்ஸ் எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ்க்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான நோபல் பரிசுகள் கடந்த 3 தினங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு (வயது 82) வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். பாலினம் மற்றும் மொழி தொடர்பாக சமத்துவத்தை தனது படைப்பில் வலியுறுத்தியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் பொருளாதார விருது அக்டோபர் 10ஆம் தேதி அறிவிக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து