முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உம்ரான் ஒருநாள் போட்டிக்கு பிட்டானவர் - வாசிம் ஜாபர்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      விளையாட்டு
Wasim-Zafar 2022 11 25

Source: provided

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சார்பாக அறிமுகமான உம்ரான் மாலிக் அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 306 ரன்கள் என்ற இலக்கை எட்டிய இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் இந்திய அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வாசிம் ஜாபர் கூறியதாவது:- டாம் லாதம் போன்ற திறமையான வீரர்களை விரைவில் ஆட்டம் இழக்க செய்யுங்கள். நியூசிலாந்தில் அவர் ஒரு முக்கியமான வீரராக திகழ்கிறார். நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும் என்றால் நீங்கள் அவர்களது விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டும். வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார். அவர் டி20 கிரிக்கெட் விட ஒருநாள் போட்டியில் தான் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன்.

__________

விஜய் ஹசாரே: மும்பையை வெளியேற்றியது உ.பி அணி

விஜய் ஹசாரே போட்டிக்கான நாக் அவுட் ஆட்டத்தில் மும்பை அணியை உத்தரப் பிரதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 48.3 ஓவர்களில் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிருத்வி ஷா 10 ரன்களுக்கும் கேப்டன் ரஹானே 26 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஹார்திக் தாமோரும் ஷாம்ஸ் முலானியும் அரை சதமெடுத்து அணியைக் காப்பாற்றினார்கள். 

ஷிவம் மவி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உத்தரப் பிரதேச அணி 45.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆர்யன் ஜுயல் 82 ரன்கள் எடுத்தார். ஜம்மு & காஷ்மீர் அணி விஹ்ஜய் ஹசாரே போட்டியில் முதல்முறையாகக் காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது. கேரளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நவம்பர் 28 அன்று நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் செளராஷ்டிரத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி. 

________________

'தல்' ஹாக்கி போட்டி: இந்திய அணி தோல்வி 

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கியது. பரபரப்பான இந்த போட்டியில் 5-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் ஆகாஷ்தீப் சிங் ஹாட்ரிக் கோல் அடித்தார். ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார். ஆஸ்திரேலியா சார்பில் பிளேக் கோவர்ஸ் (2 கோல் அடித்தார். லாச்லன் ஷார்ப் , நாதன் எஃப்ராம்ஸ் , டாம் கிரேக் ஒரு கோல்களை அடித்தனர்.

________________

சவுதி அரேபிய வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியா யாருமே எதிர் பார்க்காத வகையில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினாவை அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது. 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. இந்த வெற்றியால் சவுதி அரேபியாவில் மகிழ்ச்சி அலைக் கடல் பொங்கியது. அந்நாட்டு மன்னர் மறுநாள் பொது விடுமுறை அறிவித்தார். 

இந்த நிலையில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்ற சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அறிவித்துள்ளார். இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை ரூ.8.99 கோடி முதல் 10.48 கோடி வரையில் விற்கப்படுகிறது. இது மாதிரியான விலை உயர்ந்த பரிசு வீரர்களுக்கு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. 1994-ல் பெல்ஜியத்தை வீழ்த்திய போது இது மாதிரியே கார் பரிசு வழங்கப்பட்டது.

________________

இந்தியா - பாக்., ஆட்டம்: விராட் கோலி உருக்கம்

கடந்த அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இந்நிலையில் அந்த ஆட்டம் பற்றி ட்வீட் வெளியிட்டுள்ளார் விராட் கோலி. அவர் கூறியதாவது:

2022, அக்டோபர் 23. என் இதயத்தில் இந்நாளுக்குச் சிறப்பு இடமுண்டு. ஒரு கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தளவுக்கான உற்சாகத்தை இதற்கு முன்பு கண்டதில்லை. என்ன ஓர் ஆசிர்வதிக்கப்பட்ட மாலை அது என்று கூறியுள்ளார். 

________________

வலுவான இங்கிலாந்துடன் டிரா செய்த அமெரிக்க அணி

22வது பிபா உலககோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் 12.30 மணிக்கு அல் பேட் ஸ்டேடியத்தில் தொடங்கி நடந்த போட்டியில், குரூப் பி பிரிவில் தரவரசையில் 5வது இடத்தில் உள்ள இங்கிலாந்து-அமெரிக்கா (16வது ரேங்க்) அணிகள் மோதின. இங்கிலாந்து முதல் போட்டியில் ஈரானை 6-2 என வீழ்த்திய உற்சாகத்திலும், அமெரிக்கா முதல் ஆட்டத்தில் வேல்சுடன் டிரா செய்ததால் கட்டாய வெற்றி நெருக்கடியிலும் களம் இறங்கின. ஆட்டம் தொடங்கியது முதலே ஈரான் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணியா இது என்று அதிர்ச்சியை ஏற்படுத்துவது போல் களத்தில் செயல்பட்டது.

அமெரிக்கா, இங்கிலாந்து வீரர்களை கட்டுக்குள் வைத்திருந்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2வது பாதி ஆட்டத்தில் தொடக்கம் முதலே அமெரிக்கா கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தது. இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் டிராவில் முடிந்த 7வது போட்டி இதுவாகும். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

________________

கால்பந்து போட்டியில் டோனி ஜெர்சியுடன் வலம் வந்த ரசிகர்

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குரூப் ஜி பிரிவு லீக் சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில்- செர்பியா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் 62 மற்றும் 73-வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இறுதியில், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் பிரேசில் கால்பந்து ரசிகருடன் இணைந்து சென்னை அணி கேப்டன் டோனியின் ஜெஸியை பிடித்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சமீப காலங்களாக டோனி என்ன செய்தாலும் அது புகைப்படமாக மாறி இணையத்தை கலக்கும். கடந்த சில நாட்களுக்கு முன் டென்னிஸ் விளையாடிய புகைப்படம், குடும்பத்துடன் அமர்ந்து உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்த்த புகைப்படங்களில் இணையத்தில் வைரலானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து