இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகத்தில் மருத்துவ துறையில் காலியாக உள்ள தலைமை பதவி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ஒரு நாட்டின் மனித வளர்ச்சியின் அளவினை நிர்ணயிப்பதிலும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாகத் திகழ்வதிலும், முக்கியப் பங்கு வகிப்பது மக்கள் நல்வாழ்வு என்று சொன்னால் அது மிகையாகாது. இதன் அடிப்படையில், அனைத்து மக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பினை அளித்திடும் வகையில், அரசு மருத்துவமனைகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்; மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாராத பணியாளர்களை நியமித்தல், எளிதில் அணுக முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் கிடைக்க வழிவகை செய்தல் போன்ற முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசிற்கு உண்டு. ஆனால், பெரும்பாலான மருத்துவத் துறைகளின் தலைமைப் பதவி இடங்களே காலியாக இருக்கும் அவல நிலை திராவிட மாடல் திமுக ஆட்சியில் நிலவுவது வேதனை அளிக்கும் செயலாகும். இது கடும் கண்டனத்திற்குரியது. திமுக அரசின் திறமையின்மைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் இயங்கும் முக்கியமான இயக்குநரகங்களான மருத்துவக் கல்வி இயக்ககம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம், மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககம் ஆகியவற்றிற்கான தலைமைப் பதவிகள் எல்லாம் கூடுதல் பொறுப்பில் உள்ள நிலையில், இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளரிடமும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடமும், முதல்வரிடம் பலமுறை மனுக்களை அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக, எந்தெந்த இயக்குநர் பணியிடங்கள் எப்போது காலியாகின்றன என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும். இந்தச் சூழ்நிலையில், இயக்குநர் பதவிகள் வகிப்பவர்களின் ஒய்வுக்கு இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னரே அந்த இடத்திற்கு புதிய இயக்குநரை நியமிப்பதற்கான நடவடிக்கையை அரசு துவங்கியிருந்தால், முக்கியமான இயக்குநர் பதவிகள் இன்று காலியாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்காது.
முதல்வர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் மருத்துவத் துறைகளின் இயக்குநர் பணியிடங்களை முறையாக நிரப்பவும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியினை நிரப்பவும், காலியாகவுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியிடங்களை நிரப்பவும் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைக்கோஸ் வடை![]() 1 day 12 hours ago |
கீரை ஆம்லெட்![]() 4 days 11 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 1 week 1 day ago |
-
மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி : 2ஆவது தங்கம் வென்றது இந்தியா
26 Mar 2023புதுடெல்லி : உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் நிது கங்காசையடுத்து இந்திய வீராங்கனை சவீதி புரா தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-26-03-2023
26 Mar 2023 -
இம்ரான்கானுக்கு இன்று வரை ஜாமீன் நீட்டிப்பு
26 Mar 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு லாகூர் ஐகோர்ட்டு ஜாமீனை இன்று திங்கட்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
-
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி?
26 Mar 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இந்திய வம்சாவளி சிறுமி சுட்டுக்கொலை செய்த அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை
26 Mar 2023நியூயார்க் : அமெரிக்காவில் 5 வயது இந்திய வம்சாவளி சிறுமியை சுட்டு கொன்ற அமெரிக்கருக்கு மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
-
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல 2 நூற்றாண்டுகள் தேவை : அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
26 Mar 2023மதுரை : தமிழர்களின் பாரம்பரிய பெருமையை சொல்ல வேண்டும் என்றால் அதற்கு 2 நூற்றாண்டுகள் தேவைப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
-
தமிழகம் - காசி இடையேயான உறவு: மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
26 Mar 2023புதுடெல்லி : தமிழகம் மற்றும் காசி இடையேயான பழமையான உறவை காசி தமிழ் சங்கமம் கொண்டாடி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
தமிழகம், புதுச்சேரியில் 30-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்
26 Mar 2023சென்னை : தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 30-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பழைய விதிகள் தொடர்ந்தால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டி : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
26 Mar 2023மயிலாடுதுறை : பழைய விதிகள் தொடர்ந்தால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 1.35 கோடி ஒதுக்கீடு
26 Mar 2023மதுரை : மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
திருத்தணி முருகன் கோவிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்
26 Mar 2023திருவள்ளூர் : திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
-
கால்பந்து உலகில் பிரேசிலுக்கு எதிராக முதல் வெற்றி : அசாத்திய அணியை அப்செட் செய்த மொராக்கோ
26 Mar 2023டேன்ஜர் : கால்பந்து விளையாட்டு உலகின் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ஆப்பிரிக்க அணியான மொராக்கோ.
-
குரூப்-4 தேர்வு முடிவு: குளறுபடிகளை சரி செய்ய தேர்வர்கள் கோரிக்கை
26 Mar 2023சென்னை : வெளியிடப்பட்டுள்ள குரூப் - 4 தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்து, சரியான முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி: தனது டுவிட்டர் பக்கத்தை மாற்றம் செய்த ராகுல்காந்தி
26 Mar 2023புதுடெல்லி : தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. என ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தை மாற்றம் செய்துள்ளார்.
-
தமிழக சட்டசபையில் இன்று இரவு காங். எம்.எல்.ஏ.க்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டம்
26 Mar 2023சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு : ஏப். 1 முதல் நடைமுறைக்கு வருகிறது
26 Mar 2023புதுடெல்லி : 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், புதிய வரி முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஏப்ரல
-
ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு
26 Mar 2023ஜெய்ப்பூர் : ராஜஸ்தானின் பைக்னர் மாவட்டத்தில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.
-
36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் எல்.வி.எம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது : இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
26 Mar 2023ஸ்ரீஹரிகோட்டா : எல்.வி.எம்-3' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
-
இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை: எல்.முருகன்
26 Mar 2023மதுரை : இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
-
நியூயார்க்கில் புகழ்பெற்ற பிளாடிரான் கட்டிடம் ரூ.1,564 கோடிக்கு ஏலம்
26 Mar 2023நியூயார்க் : நியூயார்க்கில் புகழ் பெற்ற 22 மாடிகளை கொண்ட பிளாடிரான் கட்டிடம் ரூ. 1,564 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
-
‘ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் எனது பங்களிப்பு இருக்கும்’ - பயிற்சியாளராகும் விருப்பத்தை தெரிவித்த டிம் பெய்ன்
26 Mar 2023புதுடெல்லி : ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் தனது பங்களிப்பு இருக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னள் வீரர் டிம் பெய்ன் தனது பயிற்சியாளராகும் விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
-
கீழடி அருங்காட்சியகத்தை காண ஏப். 1-ம் தேதி முதல் கட்டணம்
26 Mar 2023சிவகங்கை : கீழடி அருங்காட்சியகத்தை காண வரும் 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதத்தை நிறுவும் ரஷ்யா : ஐரோப்பிய நாடுகள் கலக்கம்
26 Mar 2023மாஸ்கோ : ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் ரஷ்யா அணு ஆயுதத்தை நிறுவ உள்ளது.
-
ராகுலின் எம்.பி. பதவி பறிப்பு எதிரொலி: டெல்லியில் தடையை மீறி காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் : மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா பங்கேற்பு
26 Mar 2023புதுடெல்லி : ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நேற்று நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
புளோரிடா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவில் இந்தியர்
26 Mar 2023வாஷிங்டன் : புளோரிடா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவில் இந்தியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.