முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாத்மா காந்தி 75-வது நினைவு நாள்: ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      இந்தியா
Modi 2023 01 30

Source: provided

புதுடெல்லி : மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்மு பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில்,

மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அவரை வணங்குகிறேன், அவருடைய ஆழ்ந்த எண்ணங்களை நினைவு கூர்கிறேன். நமது தேசத்தின் சேவையில் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது, மேலும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக உழைக்க வேண்டும் என்ற நமது உறுதியை மேலும் வலுப்படுத்துவோம்" என்று மோடி கூறியுள்ளார்.

தேசப்பிதா மகாத்மா காந்தி, 1948 ஆம் ஆண்டு இதே நாளில் நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து