முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி மகள் வீட்டில் 60 சவரன் நகை மாயம் : போலீசார் தீவிர விசாரண

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
Aishwarya 2023 03 20

Source: provided

சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது வீட்டு லாக்கரில் இருந்த சுமார் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள், நவரத்தின கற்களை காணவில்லை என்றும், இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் என்றும் சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் போலீசார் புகார் அளித்துள்ளார். 

அந்த புகார் மனுவில், அந்த நகைகள் அனைத்தும் தனது திருமணத்திற்காக வாங்கப்பட்ட நகை என்றும், கடந்த 18 ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருந்தேன். பல ஆண்டுகளாக திறக்காத லாக்கர் அந்த நகைகளை கடைசியாக தனது தங்கை செளந்தர்யாவின் திருமணத்தின் போது பயன்படுத்தி விட்டு மீண்டும் லாக்கரில் வைத்ததாகவும், அதன்பின் அந்த லாக்கரை திறக்காமல் வைத்திருந்தேன்.  மூன்று முறை வீடு மாறிய போது லாக்கரில் இருந்த நகையை திறந்து பார்க்கவில்லை. 

கடந்த பிப்ரவரி 10-ம்  தேதி லாக்கரை திறந்து பார்த்தபோது தான், அதில் நகை இல்லாதது தெரிந்ததாகவும், லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் எனவும், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா அந்த மனுவில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து