எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : ரயில் விபத்துகளை தடுக்க உதவக் கூடிய ‘கவாச்’ தொழில்நுட்பம் இருந்திருந்தால் ஒடிஷாவில் நிகழ்ந்த ரயில் விபத்தை தவிர்த்திருக்கலாம் என்று பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஒடிசா ரயில்கள் விபத்தில் 250-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயுள்ளன. 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் நடந்த 3 மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து இணைந்துள்ளது. இந்த ரயில் விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் தடுக்கும் ‘கவாச்’ (Kavach) என்ற தொழில்நுட்பம் விபத்து நடந்த பகுதியில் இல்லை என்ற தகவலை ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். இதுதான் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
கவாச் தொழில்நுட்பம் என்றால் என்ன?
கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் ரயில்கள் பாதுகாப்புக்காக முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான 'கவாச்'-ஐ அறிவித்தது. இதற்காக மத்திய அரசின் ரிசேர்ச் டிசைன்ஸ் அண்ட் ஸ்டாண்டர்ட்ஸ் ஆர்கனைசேஷனிற்கு மூன்று இந்திய நிறுவனங்கள் இதனை உருவாக்கிக் கொடுக்க, இந்திய ரயில்வே அதனை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. கவாச் என்ற சொல் கவசம் - பாதுகாப்பு என்பதைக் குறிப்பதாகும்.
கவாச் எப்படி செயல்படும்?
கவாச் தொழில்நுட்பமானது லோக்கோ பைலட்டுகள் என்றழைக்கப்படும் ரயில் ஓட்டுநர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும். எஸ்பிஏடி, சிக்னல் பாஸிங் அட் டேஞ்சர் எனப்படும் இந்த சமிக்ஞையானது ஒரே மார்க்கத்தில் இரு ரயில்கள் வந்தால் எச்சரிக்கும். மிகுந்த அடர்த்தியான பனி மூட்டம் இருக்கும்போது எதிரே ரயில் வந்தால் அலர்ட் செய்யும். எச்சரிக்கை செய்வதோடு மட்டுமல்லாமல், இது தானாகவே பிரேக் அப்ளை செய்து ரயிலின் வேகத்தை மட்டுப்படுத்தி விபத்துக்கான சாத்தியத்தை குறைக்கும்.
ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்திருக்கலாமா?
இந்நிலையில் கவாச் தொழில்நுட்பம் இல்லாததால் தான் ஒடிசா ரயில் விபத்து நடந்ததாக எதிர்க்கட்சிகள் பலவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. விபத்துக்குள்ளான மூன்று ரயில்களில் எதிலும் கவாச் தொழில்நுட்பம் இல்லை என்று சொல்லப்படுவதால் அது பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், கவாச் இருந்திருந்தால் இத்தகைய மிகப் பெரிய விபத்தை தவிர்த்திருக்கலாமா என்பது ஊகங்களின் வசமே விடக்கூடியதாக உள்ளது என்று தொழில்நுட்ப வல்லுநர்களே கூறுகின்றனர். காரணம், ஒடிசா விபத்து இந்திய ரயில் விபத்து வரலாற்றிலேயே மிகவும் சிக்கலானது.
ஒரு ரயில் தவறான பாதையில் மாறிச் சென்று நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதுகிறது. அந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு வேறொரு தண்டவாளத்தில் வந்த மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மோதுகிறது. அந்த ரயிலின் பெட்டிகளும் தடம் புரள்கின்றன. இப்படி மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், கவாச் இதில் எந்த அளவுக்கு உதவியிருக்கும் என்பது இதுபோன்ற விபத்துகளை அது தடுத்திருந்த முந்தைய சான்றுகள் இருந்தால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இருந்தாலும், இதுபோன்ற தொழில்நுட்பங்களை சுணக்கமின்றி செயல்படுத்த பரிந்துரைக்கின்றனர். எதிர்காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துப் பேரிடரில் பாடம் கற்கவும் உதவும் என்பதால்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
மராட்டிய அரசியலில் பரபரப்பு: பா.ஜனதா- சிவசேனா திடீர் மோதல்
19 Nov 2025மும்பை : பா.ஜனதா- சிவசேனா இடையே திடீர் மோதலில் அமைச்சரவை கூட்டத்தை சிவசேனா மந்திரிகள் புறக்கணித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
-
வருங்கால வளர்ச்சிக்கு தேவையானதும், அவசியமான மெட்ரோ ரயில் திட்டத்தை கோவை, மதுரை நகரங்களுக்கு நிச்சயம் கொண்டு வருவோம் : மத்திய அரசு நிராகரித்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
19 Nov 2025சென்னை : கோவை, மதுரை மெட்ரோ திட்ட மத்திய அரசு நிராகரித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டாட்சிக் கருத்தியலை சிதைப்பதை சுயமரியாதைமிக்க மண்ணான
-
தனியார் வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகள் பயன்படுத்த கூடாது: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை
19 Nov 2025தூத்துக்குடி, உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சிவப்பு, நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை தனியார் வாகனங்களில் பயன்படுத்த கூடாது என்று எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
-
விஜய் நிலைப்பாட்டில் திடீர் மனமாற்றம்: அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை?
19 Nov 2025சென்னை : விஜய் நிலைப்பாட்டில் திடீர் மனமாற்றம் ஏற்படும் என்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை
19 Nov 2025புதுடெல்லி : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடையை விதித்துள்ளது.
-
ஆலங்குளம், கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
19 Nov 2025சென்னை : ஒட்டப்பிடாரம், ஆலங்குளம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
காசா அமைதி திட்டத்திற்காக ட்ரம்ப் வரைவு தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல்
19 Nov 2025நியூயார்க் : காசா அமைதி திட்டத்திற்கு ஐ.நா. அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-11-2025.
19 Nov 2025 -
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; தமிழக அரசாணை வெளியீடு
19 Nov 2025சென்னை, அரசு ஊழியர்களுககு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
சிங்கள ஆட்சியாளர்களுக்கு திருமாவளவன் கண்டனம்
19 Nov 2025சென்னை : இலங்கையின் ஒற்றை ஆட்சி முறைமையின்கீழ் தமிழ் மக்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழமுடியாது என்று தெரிவித்துள் வி.சி.க.
-
மதுரையில் நிகழந்த சோகம்: நாய் குறுக்கே பாய்ந்ததால் சாலையில் விழுந்த தம்பதி, பேருந்து மோதி பலி
19 Nov 2025மதுரை : மதுரையில் நாய் குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் இருந்து கணவனும், மனைவியும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.
-
கோவையில் இயற்கை வேளாண் மாநாடு: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி
19 Nov 2025கோவை கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார்.
-
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு கோவையில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
19 Nov 2025கோவை : பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
-
பாரதிய ஜனதாவில் இணைந்த பிரபல நடிகை ஊர்மிளா உன்னி
19 Nov 2025திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகை ஊர்மிளா உன்னி பா.ஜனதாவில் இணைந்தார்.
-
திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி தரப்படுமா? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
19 Nov 2025தி.மலை, தீபத்தின் போது ஈரப்பதத்தை பொறுத்து மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என முடிவு செய்யப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
-
கூகுள் மேப்பில் 10 புதிய அம்சங்கள் அறிமுகம்
19 Nov 2025வாஷிங்டன் : கூகுள் மேப்பில் 10 புதிய அப்டேட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
-
சபரிமலை: கூட்ட நெரிசலில் பெண் பலி
19 Nov 2025சபரிமலை : சபரிமலை கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தார்.
-
தென்னாப்பிரிக்காவுக்கு 150 பாலஸ்தீனியர்கள் நாடு கடத்தல்
19 Nov 2025ஜோகன்னஸ்பெர்க் : தனி விமானம் மூலம் சட்டவிரோதமாக தென்னாப்பிரிக்காவுக்கு 150 பாலஸ்தீனியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
-
வருவாய் துறை ஊழியர்கள் புறக்கணிப்பு: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் பாதிப்பு
19 Nov 2025சென்னை : வருவாய் துறை ஊழியர்கள் புறக்கணிப்பால் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை இந்தியா வருகை
19 Nov 2025டெல்லி : ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் இந்தியா வந்துள்ளார்.
-
ஆடம்பரம் அல்ல; அவசியமானது: மதுரை, கோவை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை தேவை : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
19 Nov 2025சென்னை : மெட்ரோ ரயில் என்பது ஆடம்பரம் அல்ல அவசியமானது என்று தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை, கோவை நகரங்களுக்கு இது அவசியமான உள்கட்டமைப்புத் தேவை என்றும் அவ
-
ரஷ்ய அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: முக்கிய விசயங்கள் பற்றி ஆலோசனை
19 Nov 2025மாஸ்கோ : ரஷ்ய அதிபருடன் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
-
ஏ.ஐ.யை நம்பாதீர்கள்: சுந்தர் பிச்சை
19 Nov 2025வாஷிங்டன் : ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
-
கோவை பயணம் குறித்து தமிழில் பதிவிட்ட பிரதமர்
19 Nov 2025புதுடெல்லி : கோவையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்றது குறித்து பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.
-
பாட்னா, காந்தி மைதானத்தில் விழா: பீகார் முதல்வராக இன்று நிதிஷ்குமார் பதவியேற்பு : பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு
19 Nov 2025பாட்னா : தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பீகாரின் முதல்வராக நிதிஷ்குமார்10-வது முறையாக இன்று பதவியேற்கவுள்ளார்.


