எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது சாதனைகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர். பல முறை தங்களது அணிகளுக்காக வெற்றியையும் தேடித் தந்திருக்கிறார்கள். உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்து முதல் 10 இடங்களில் இருப்பவர்களை பின்வருமாறு காணலாம்.
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)
உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். 45 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2,278 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 56.95 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 88.98 ஆகும். உலகக் கோப்பை போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 152. உலகக் கோப்பை போட்டிகளில் அதிகம் சதம் அடித்தவரும் இவரே. கடந்த 1996 மற்றும் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் அதிகபட்சமாக முறையே 523 ரன்கள் மற்றும் 673 ரன்கள் குவித்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் அடித்த 673 ரன்களே தனி நபர் ஒருவரால் ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ஸ்கோர் ஆகும்.
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)
உலகக் கோப்பை தொடரில் 46 போட்டிகளில் விளையாடியுள்ள ரிக்கி பாண்டிங் 1,743 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 45.86 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 79-க்கும் அதிகமாக உள்ளது. அவர் 5 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 140*. இதனை அவர் இந்தியாவுக்கு எதிரான 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எடுத்தார்.
குமார் சங்ககாரா (இலங்கை)
உலகக் கோப்பை தொடரில் 37 போட்டிகளில் விளையாடியுள்ள சங்ககாரா 1,532 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 56.74 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 86.55 ஆகும். அவர் 5 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 124.
பிரையன் லாரா (மே.இ.தீவுகள்)
பிரையன் லாரா உலகக் கோப்பை தொடரில் 34 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 1,225 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 42.24 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 86-க்கும் அதிகமாக உள்ளது. அவர் 2 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 116.
ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா)
கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் உலகக் கோப்பை போட்டிகளில் அறிமுகமானார் டி வில்லியர்ஸ். அடுத்த மூன்று உலகக் கோப்பை தொடர்களிலும் தனது சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். 23 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,207 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 63.52 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 117-க்கும் அதிகமாக உள்ளது. அவரது சிறந்த ஸ்கோர் 162*. அவர் 4 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார்.
கிறிஸ் கெயில் (மே.இ.தீவுகள்)
ஆடுகளத்தில் களமிறங்கினால் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைப்பவர் கிறிஸ் கெயில். உலகக் கோப்பையில் 35 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,186 குவித்துள்ளார். அவரது சராசரி 35.93 ஆகும். ஸ்டிரைக் ரேட் 90.53 ஆக உள்ளது. அவர் 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 215. இதுவே உலகக் கோப்பை தொடரின் முதல் இரட்டை சதமாகும்.
சனத் ஜெயசூர்யா (இலங்கை)
உலகக் கோப்பையில் 38 போட்டிகளில் விளையாடியுள்ள சனத் ஜெயசூர்யா 1,165 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 34.26 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 90.66 ஆக உள்ளது. அவர் 3 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 120.
ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா)
உலகக் கோப்பையில் 36 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் 1,148 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 45.92 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 74.40 ஆகும். அவர் ஒரு சதம் மற்றும் 9 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 128*.
ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)
உலகக் கோப்பை வரலாற்றில் வங்கதேசம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 29 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,146 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 45.84 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 82-க்கும் அதிகமாக உள்ளது. அவர் 2 சதங்கள் மற்றும் 10 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 124*. அவர் 2 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் எடுத்துள்ளார்.
திலகரத்னே தில்ஷன் (இலங்கை)
உலகக் கோப்பை தொடரில் 27 போட்டிகளில் விளையாடியுள்ள தில்ஷன் 1,112 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 52.95 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 92-க்கும் அதிகமாக உள்ளது. அவர் 4 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 161*. 2011 ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக தில்ஷன் உள்ளார். அவர் 2011 உலகக் கோப்பை தொடரில் 9 போட்டிகளில் 500 ரன்கள் எடுத்தார். அதில் 2 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் அடங்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 6 days 12 hours ago |
முட்டை தக்காளி![]() 1 week 2 days ago |
-
ரூ. 1000 கோடியில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
01 Dec 2023சென்னை : ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட
-
காஷ்மீரில் என்கவுண்ட்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை
01 Dec 2023ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
-
கெஜ்ரிவால் ராஜினாமா குறித்து கருத்து கேட்ட டெல்லி அமைச்சர்
01 Dec 2023புதுடில்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை முன் ஆஜராகாமல் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்வதா, வேண்டாமா என வீடு வீடாக மக்களிடம் ஆம் ஆத்ம
-
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு: முக்கிய குற்றவாளி துபாயில் கைது
01 Dec 2023சென்னை, ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னையில் இன்று அரசு பள்ளிகளுக்கு விடுமுறை
01 Dec 2023சென்னை : இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மசோதா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தீர்வு காண முதல்வரை அழைத்து பேசி தீர்வு காணுங்கள்: தமிழ்நாடு கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
01 Dec 2023புதுடெல்லி, சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை. 'கவர்னர் - முதல்வர் இடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது.
-
தொடர் மழையால் தமிழகத்தில் 1,500 ஏரிகள் முழுமையாக நிரம்பின
01 Dec 2023சென்னை : தமிழகத்தில் மொத்தமுள்ள 14,139 ஏரிகளில் 1,500 ஏரிகள் 100 சதவீதம் முழுமையாக நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மன்சூர் அலிகான் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம்: நடிகை திரிஷா
01 Dec 2023சென்னை : மன்சூர் அலிகான் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அளித்த விளக்க கடிதத்தில் நடிகை திரிஷா தெரிவித்துள்ளார
-
31 கைதிகள் விடுதலைக்கு தமிழக கவர்னர் ஒப்புதல்
01 Dec 2023சென்னை : 31 கைதிகள் விடுதலைக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
மணிப்பூரில் வங்கிக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.18.85 கோடி கொள்ளை
01 Dec 2023உக்ருல் : மணிப்பூரில் வங்கிக்குள் புகுந்து ரூ.18.85 கோடியை துப்பாக்கி முனையில் மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வுகள்: முக்கிய அறிவிப்பு
01 Dec 2023புதுடெல்லி : மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்போது, எந்த தனிப்பட்ட அறிவிப்பு அல்லது உயர் மதிப்பீட்டையோ வழங
-
விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கிய வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தல்
01 Dec 2023மதுரை, விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தாமதம் ஏன்?
-
வலுப்பெறும் 'மிக்ஜம்' புயல் வரும் 5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையக் கடக்கும்: வடதமிழகம், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்
01 Dec 2023சென்னை, வங்கக் கடலில் வலுப்பெறும் மிக்ஜம் புயல் வரும் 5-ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையக் கடக்கும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு
-
அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பதிவு கட்டண குறைப்பு அமலுக்கு வந்தது
01 Dec 2023சென்னை : அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், வீடு விற்பனைக்கான முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கட்டுமான பணிகளை மேற்கொள்ள மாட்டோம்: சிதம்பரம் கோவில் தொடர்பான வழக்கில் பொது தீட்சிதர்கள் உறுதி
01 Dec 2023சென்னை : சிதம்பரம் கோவில் கட்டுமானம் தொடர்பான வழக்கு - பொது தீட்சிதர்களுக்கு ஐகோர்ட்டு கேள்வி எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொது தீட்சிதர்கள் தரப்பில்
-
புயல் எச்சரிக்கையால் முதல்வர் ஸ்டாலினின் இன்றைய நிகழ்ச்சி ஒத்திவைப்பு
01 Dec 2023சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சனிக்கிழமை நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவானது புயல், கனமழை எச்சரிக்கை காரணத்தினால் ஒத்திவைக்கப்படு
-
தேசிய வருவாய் வழி தேர்வு: டிசம்பர் 4 முதல் விண்ணப்பம்
01 Dec 2023சென்னை : தேசிய வருவாய் வழி தேர்வு டிச. 4 முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
-
தீவுத்திடல் அருகே தனியார் நடத்தும் கார் பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
01 Dec 2023சென்னை : சென்னை தீவுத்திடல் அருகே தனியார் நடத்தும் கார் பந்தயத்துக்கு தமிழக அரசு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கி
-
சென்னையில் ரூ.10-க்கு ஆவின் பால் பாக்கெட் விநியோகம்
01 Dec 2023சென்னை : சென்னையில் ரூ.10-க்கு ஆவின் பால் பாக்கெட் நேற்று முதல் விநியோகப்பட்டது.
-
திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும் 4-ம் தேதி ரெட் அலர்ட்
01 Dec 2023சென்னை : திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும் 4-ம் தேதி மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
3,500 பேர் பயனடைவர்: சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ஊதிய உயர்வு அறிவிப்பு
01 Dec 2023சென்னை, சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 3,500 தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
திருப்பதியில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் : ஏழுமலையான் காப்பாற்றுவார் என பேட்டி
01 Dec 2023திருப்பதி : திருப்பதி கோவிலில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் செய்தார்.
-
மற்ற நாடுகளை விட இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4 சதவீதமாக உள்ளது: பிரதமர் மோடி
01 Dec 2023துபாய் : இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4 சதவீதமாக உள்ளது என்றும், இது சர்வதேச நாடுகளை விட இந்தியாவின் கார்பன் வெளியீடு மிக குறைவு என்றும் பிரதமர் மோடி தெரிவித்த
-
3 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
01 Dec 2023சென்னை : கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சபரிமலையில் அரவணை பாயாசம் தயாரிக்க ஏலக்காய் சேர்க்கப்படாது : திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு
01 Dec 2023சபரிமலை : ஏலக்காய் சேர்ப்பது மூலம் அரவணை உட்கொள்ளும் பக்தர்கள் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படலாம் என்று கேரள ஐகோர்ட் கூறிய நிலையில், சபரிமலையில் அரவணை பாயாசம் தயாரிக்க ஏல