எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது.
குஜராத் பந்துவீச்சு...
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 10 சவாய் மான்சிங் மைதானத்தில் 24 வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஷ்வால், ஜோஸ் பட்லர் களமிறங்கினர். 4.2 ஓவரில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஷ்வால் அவுட்டானார். அடுத்ததாக சஞ்சு சாம்சன் களமிறங்கினார். இதனையடுத்து பட்லர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ரியான் பராக் களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய இந்த இணை 16. 5 ஓவரில் 150 ரன்களை தொட்டது.
197 ரன்கள் இலக்கு...
78 ரன்கள் எடுத்த நிலையில் ரியான் பராக் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெட்தமையர் முதல் பந்திலே பவுண்டரி அடித்தார். பவுண்டரிகளை விளாசிய சாம்சன் 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்தது. இதன்மூலம் குஜராத் அணிக்கு 197 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 197 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் சாய் சுதர்ஷன் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஓபனிங் ஆடினர். ஆறு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர் என 46 பந்துகளுக்கு 72 ரன்களை குவித்து அதிரடி காட்டினார் ஷுப்மன் கில். 15வது ஓவர் வரை தாக்குப் பிடித்த கில் சாஹல் வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
பரபரப்பான தருணம்...
ரஷித் கான் மற்றும் ராகுல் தெவாடியா களத்தில் விளையாடும்போது, குல்தீப் சென் அடுத்து இறங்கிய மேத்யூ வேட் மற்றும் அபினவ் மனோகர் இருவரும் தலா 4 மற்றும் ஒரு ரன்களுடன் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ராகுல் டேவாட்டியா மற்றும் ஷாருக் கான் இணை விளையாடினர். 18 ஓவர் முடிவில் 162 ரன்கள் மட்டுமே அடித்திருந்த குஜராத் அணியை கடைசி 2 ஓவர்களில் காப்பாற்றினார் ரஷீத் கான். பரபரப்பான கடைசி தருணத்தில் நான்கு பவுண்டரிகளை அடித்து குஜராத் அணி ரசிகர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்தார்.
ரஷீத் கான் அபாரம்...
கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் டேவாட்டியா ரன் அவுட் ஆகவும், தோல்வி உறுதி என்ற நிலை குஜராத் அணிக்கு ஏற்பட்ட நேரத்தில், கடைசி பந்தில் ஒரு ஃபோர் தூக்கி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார் ரஷீத் கான். பரபரப்பான இறுதி ஓவரில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.
கிண்டலான பதில்
தோல்வி குறித்து சஞ்சு சாம்சன் தெரிவிக்கையில்., கடைசி பந்தில்தான் நாங்கள் தோற்றோம் (எங்கு தோற்றோம் என்ற கேள்விக்கு?). இப்போது இது குறித்து பேசுவது கடினமாக இருக்கிறது. போட்டியில் எங்கு தோற்றோம் என்பதைக் கூறுவதுதான் கேப்டனின் கடினமான வேலையாக நினைக்கிறேன். உணர்ச்சிகள் குறைந்த பிறகு எங்கு தோற்றோம் என தெளிவாகக் கூறுகிறேன். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வாழ்த்துகளை சொல்லியாக வேண்டும். போட்டி முடிந்த பிறகு எங்கு தோல்வியடைந்தோம் என கேப்டன்கள் விளக்கம் சொல்லுவது ஒரு வழக்கமான நடவடிக்கை. ஆனால், இது குறித்து இதுவரை யாரும் இந்த எதார்த்தமான பதில் சொல்லியதில்லை. அதனால் இது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |


