முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 20-ம் தேதி கேரளாவில் பிரியங்கா காந்தி பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      இந்தியா
priyanka-gandhi-2024-04-16

திருவனந்தபுரம், கேரளாவில் வரும் 20-ம் தேதி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். 

கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 26-ம தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 20 தொகுதிகளிலும் மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. 

பெரும்பாலான தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவுகிறது. பிரச்சாரம் நிறைவடைய இன்னும் 8 நாட்களே இருப்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி போட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர். 

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக பிரியங்கா காந்தி வருகிற 20-ம் தேதி கேரளா செல்கிறார். அவர் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, சாலக்குடி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்யும் போது, ராகுல் காந்தியும் அவருடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரியங்கா காந்தியும் கேரளா வர உள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து