எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
2-ம் கட்ட வாக்குப்பதிவு...
7 கட்டமாக நடைபெறும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. முதல் கட்டத்தில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இவற்றில் மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா மாநிலங்களில் இது இரண்டாம் மற்றும் கடைசிகட்ட வாக்குப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்டத் தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில், இன்று 2-ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
எந்தெந்த மாநிலங்களில்...
1) அசாம்: 5 மக்களவைத் தொகுதிகள் (மொத்தம் 14), 2) பிகார்: 5 (மொத்தம் 40), 3) சத்தீஸ்கர்: 3 (மொத்தம் 11), 4) கர்நாடகா: 14 (மொத்தம் 28), 5) கேரளா: 20 (மொத்தம் 20), 6) மத்தியப் பிரதேசம்: 7 (மொத்தம் 29), 7) மகாராஷ்டிரா: 8 (மொத்தம் 48), 8) மணிப்பூர்: 1, 9) ராஜஸ்தான்: 13 (மொத்தம் 25), 10) திரிபுரா: 1 (மொத்தம் 2), 11) உத்தரப் பிரதேசம்: 8 (மொத்தம் 80), 12) மேற்கு வங்கம்: 3 (மொத்தம் 42), 13) ஜம்மு காஷ்மீர்: 1 (மொத்தம் 5).
முக்கிய வேட்பாளர்கள்...
இன்று நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் பல முக்கிய வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். குறிப்பாக கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆனி ராஜாவையும், பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திராவையும் களம் இறக்கியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜகவின் ராஜீவ் சந்திரசேகரை எதிர்கொள்கிறார். இவர்களைத் தவிர மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஹேமமாலினி, கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
கேரளாவில்...
கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. வயநாடு மக்களவைத் தொகுதியில் முஸ்லிம்கள் 45 சதவீதம், இந்துக்கள் 41 சதவீதம், கிறிஸ்தவர்கள் 13 சதவீதம் பேர் உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது வயநாடு தொகுதியில் 65 சதவீத வாக்குகளுடன் ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்றார். வயநாட்டை காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜகவின் ராஜீவ் சந்திரசேகரை எதிர்கொள்கிறார்.
உத்தரப் பிரதேசம்...
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் இன்று 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அம்ரோஹா, மீரட், பாக்பத், காசியாபாத், கவுதம் புத்தா நகர், புலந்த்சாஹர், அலிகர் மற்றும் மதுரா தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. 8 தொகுதிகளில் மொத்தம் 91 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். உ.பி.யின் மதுரா தொகுதியில் 3வது முறையாக தொடர் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறார் ஹேமா மாலினி, மீரட்டில் ராமாயண சீரியலில் ராமராக நடித்த அருண் கோவில் களம் காண்கிறார். மீரட் அவரது சொந்த ஊரும் கூட. அதேபோல் தற்போது பாஜக வசம் உள்ள அம்ரோஹா தொகுதியில் டானிஷ் அலி காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார்.
தலைவர்கள் பிரசாரம்...
உ.பி.யின் இந்த 8 தொகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்டியா கூட்டணி சார்பில் அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி ஆகியோரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, ராஷ்ட்ரீய லோக் தள கட்சியின் ஜெயந்த் சிங் ஆகியோரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
கர்நாடகாவில்...
கர்நாடகாவில் இன்று உடுப்பி சிக்மகளூரு, ஹசன், தக்சின கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூரு, சாமராஜநகர், பெங்களூரு (ஊரகப் பகுதி), பெங்களூரு வடக்கு, பெங்களு மத்தி, பெங்களூரு தெற்கு, சிக்பல்லபூர், கோலார் ஆகிய தொகுதிகள் தேர்தலை எதிர்கொள்கின்றன. இவற்றில் பெங்களூரு தெற்கு மற்றும் மைசூரு முக்கிய தொகுதிகளாக அறியப்படுகின்றன. பெங்களூரு தெற்கு தொகுதியில் தேஜஸ்வி சூரியா மீண்டும் வெற்றி பெறும் முனைப்பில் களம் காண்கிறார். ஆனால் அவரை எதிர்த்து மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி களமிறக்கப்பட்டுள்ளார். மைசூருவில் பாஜக சார்பில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த யதுவீர் வாடியார் களம் காண்கிறார். கடந்த 2019 தேர்தலில் கர்நாடகாவில் பாஜக 25 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்த முறை மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25-ல் பாஜக நேரடியாக போட்டியிடுகிறது. 3 தொகுதிகளில் கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிடுகிறது.
மகாராஷ்டிராவில்...
மகாராஷ்டிராவில் இன்று 8 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் நான்டட், அமராவதி தொகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நான்டட் தொகுதி காங்கிரஸின் கோட்டையாக இருந்த நிலையில் அக்கட்சியில் இருந்து திடீரென பாஜகவில் இணைந்தார் அசோக் சவான். அத்தொகுதியில் இருமுறை வெற்றி பெற்றுள்ள அசோக் சவான் இந்த முறை பாஜகவுக்கு அதை வென்று கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில்...
டார்ஜிலிங், ராய்கஞ்ச், பலூர்கட் மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 42 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. பாலூர்கட் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் சுகந்த மஜும்தார் களம் காண்கிறார். சிட்டிங் எம்.பி.யான அவரை எதிர்த்து பிப்லப் மித்ராவை களமிறக்கியுள்ளது திரிணமூல் காங்கிரஸ். டார்ஜிலிங் பொருத்தவரை சிட்டிங் பாஜக எம்.பி. ராஜு பிஸ்தாவை எதிர்த்து கோபால் லாமாவை திரிணமூல் களமிறக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி மேற்குவங்கத்தின் கூச்பெஹார், அலிபுர்துராஸ், ஜல்பாய்குரியில் நடந்த முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 82 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.