எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பைத் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. மேற்கிந்தியத் தீவுகளின் ஆடுகளங்கள் மிகவும் மெதுவான ஆடுகளங்களாக இருக்கலாம். அதனால், அணித் தேர்வுக்குழு கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை அணியில் எடுத்துள்ளது. அதனால் கூட ரிங்கு சிங்குக்கு அணியில் இடம் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால்,இது ரிங்கு சிங்கின் கிரிக்கெட் பயணத்தின் தொடக்கம் மட்டுமே. அதனால் அவர் அணியில் சேர்க்கப்படாது குறித்து மனம் தளரக் கூடாது.
50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆதிக்கம் செலுத்தின. டி20 உலகக் கோப்பையிலும் இந்த இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி சிறப்பாக உள்ளது. அணியில் உள்ள அனைவரும் போட்டியை வென்றுக் கொடுப்பவர்கள் என்றார்.
வீராங்கனையை சிறப்பித்த கூகுள்
ஹமிதா பானு இந்தியாவின் முதல் தொழில்முறை மல்யுத்த வீராங்கனை ஆவார். 1954-ம் ஆண்டு இதே நாளில், பிரபல மல்யுத்த வீரர் பாபா பஹல்வானை குத்துச்சண்டைப் போட்டியில் வெறும் 1 நிமிடம் 34 நொடிகளில் ஹமிதா பானு தோற்கடித்தார். அதன் பின்னர் அவருக்கு சர்வதேச அங்கீகாரமும் பெரும் புகழும் கிடைத்தது. அதனைச் சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம், கவன ஈர்ப்புச் சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஹமிதா பானு, மல்யுத்த வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார். அச்சமின்றி எடையும் எதிர்கொள்ளும் அவரின் பண்பு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுக்க நினைவு கூறப்படுகிறது. கூகுள் கவன ஈர்ப்புச் சித்திரத்தை வடிவமைத்த பெங்களூரைச் சேர்ந்த திவ்யா நேகி கூறுகையில், “டூடுல் வடிவமைக்க ஹமிதா பானு குறித்து ஆராய்கையில் பழமைவாதத்திற்கு எதிராக போராடிய அவரது வாழ்க்கை மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. குழு சிந்தனைக்கு எதிராகச் செயல்படுவது மிகக் கடினமானது. மேலும், பெண்ணாக இருந்து அதனைச் செய்வது இன்னும் சிக்கலாக்கும். ஆனாலும், அவற்றை மீறி ஹமிதா வெற்றிகளைக் குவித்துள்ளார்” என்றார்.
ரஷ்ய செஸ் வீரர் விமர்சனம்
காங்கிரஸ் எம்.பி., ராகுல், அரசியல் பிரசாரத்திற்கு இடையே செஸ் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. மேலும், தனக்கு பிடித்த செஸ் வீரர் ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் எனக்கூறியிருந்தார். இது தொடர்பாக ஒருவர், எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், நல்லவேளை, கேரி காஸ்பரோவ் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் விரைவில் ஓய்வு பெற்று விட்டனர். இல்லையென்றால், அவர்கள் இக்காலத்தில் மிகப்பெரிய செஸ் மேதையை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்'' என பதிவிட்டு இருந்தார். அதனுடன் கேரி காஸ்பரோவ்வையும் மேற்கோள் காட்டி இருந்தார்.
இதனால், இந்த பதிவு காஸ்பரோவின் கவனத்திற்கு சென்றது. அவர் அதற்கு அளித்த பதிலில், தலைமைக்கு சவால் விடுவதற்கு முன்பு ராகுல் ரேபரேலியில் வெற்றி பெற வேண்டும் '' எனக்கூறியிருந்தார். இதனையடுத்து இந்த பதிவு வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கேரி காஸ்பரோவ் அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது: எனது சிறிய ஜோக் இந்திய அரசியலில் தாக்கம் அல்லது நிபுணத்துவம் பெறாது என நான் நம்புகிறேன். எனக்கு பிடித்த விளையாட்டில் ஒர் அரசியல்வாதி ஈடுபடுவதை என்னால் பார்க்காமல் இருக்க முடியாது '' எனக்கூறியுள்ளார். இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டோனி குறித்து பதிரானா உருக்கம்
சென்னை அணியில் இடம்பெற்றுள்ள இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரானா வேகப்பந்து வீச்சு துறையில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.அவர் கடைசிக்கட்ட ஓவர்களில் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து வருகிறார். குறிப்பாக கடந்த வருடம் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் எடுத்த அவர் சென்னை 5வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் சி.எஸ்.கே அணியில் டோனி தம்மை மற்றொரு அப்பாவைப் போல பார்த்துக் கொள்வதாக பதிரானா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் டோனி கொடுக்கும் சிறிய ஆலோசனைகள் கூட பெரிய அளவில் அசத்துவதற்கு உதவுவதாக உள்ளது என தெரிவிக்கும் அவர் இது பற்றி சி.எஸ்.கே நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியது பின்வருமாறு,
என்னுடைய அப்பாவுக்கு பின் கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி பெரும்பாலும் என் அப்பாவின் வேலையை செய்கிறார். எப்போதும் என் மீது அறையை காட்டும் அவர் நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சில ஆலோசனைகளை கொடுக்கிறார். எனது வீட்டில் இருக்கும் போது கிட்டத்தட்ட எனது அப்பா காட்டும் அக்கறையை அவர் இங்கே காட்டுகிறார். அதுவே போதும் என்று நினைக்கிறேன். களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவர் நிறைய விஷயங்களை என்னிடம் சொல்ல மாட்டார். சிறிய விஷயங்களை மட்டுமே சொல்வார். ஆனால் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அது எனக்கு நிறைய தன்னம்பிக்கையையும் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
டி20 உலகக்கோப்பைகான நடுவர்கள்
9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 28 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 55 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் இதில் நடைபெற உள்ள முதல் சுற்று போட்டிகளுக்கான நடுவர்களின் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி 20 நடுவர்கள் மற்றும் 6 மேட்ச் ரெப்ரிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
நடுவர்கள்: கிறிஸ் பிரவுன், குமார் தர்மசேனா, கிறிஸ் கபனே, மைக்கேல் கோப், அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், அல்லாஹுடியன் பலேக்கர், ரிச்சர்ட் கெட்டில்பரோ, ஜெயராமன் மதனகோபால், நிதின் மேனன், சாம் நோகஜ்ஸ்கி, அஹ்சன் ராசா, ரஷித் ரியாஸ், பால் ரீபெல், லாங்டன் ரூசெர், ஷாகித் சைகாட், ரோட்னி டக்கர், அலெக்ஸ் வார்ப், ஜோயல் வில்சன் மற்றும் ஆசிப் யாகூப். மேட்ச் ரெப்ரிகள்: டேவிட் பூன், ஜெப் குரோவ், ரஞ்சன் மதுகல்லே, ஆண்ட்ரூ பைக்ராப்ட், ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்.
டி-20 வெஸ்ட் இண்டீஸ் அணி
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றன. ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன் போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு ரோவ்மன் பவல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு:- ரோவ்மேன் பவல் (கேப்டன்), அல்சாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மேயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரசல், ஷெர்பேன் ரூதர்போர்ட், ரோமரியோ ஷெப்பர்ட்.
டி20 அமெரிக்க அணி அறிவிப்பு
நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன் போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள அமெரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு மோனாங்க் படேல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியில் நியூசிலாந்து முன்னாள் வீரரான கோரி ஆண்டர்சன் இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்க அணி விவரம் பின்வருமாறு:- மோனாங்க் படேல் (கேப்டன்), ஆரோன் ஜோன்ஸ் (துணை கேப்டன்), ஆண்ட்ரீஸ் கவுஸ், கோரி ஆண்டர்சன், அலி கான், ஹர்மீத் சிங், ஜெஸ்ஸி சிங், மிலிந்த் குமார், நிசார்க் படேல், நிதிஷ் குமார், நோஷ்துஷ் கென்ஜிகே, சவுரப் நேத்ரால்வாகர், ஷாட்லி வான் ஷால்க்வி , ஸ்டீவன் டெய்லர், ஷயான் ஜஹாங்கீர். ரிசர்வ் வீரர்கள்: கஜானந்த் சிங், ஜுவானோய் டிரைஸ்டேல், யாசிர் முகமது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 3 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை6 days 21 hours ago |
ஆனியன்ப்ரை1 week 2 days ago |
-
கனமழை எச்சரிக்கை: 3 நாட்கள் நீலகிரி வருவதை தவிர்க்க கலெக்டர் அறிவுறுத்தல்
17 May 2024ஊட்டி : கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 3நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட கலெக்டர் அருணா அறிவுறுத்தி உள்ளார்.
-
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா?: மின்வாரியம் விளக்கம் : வாட்ஸ்அப்பிலும் இனி கட்டணம் செலுத்தலாம்
17 May 2024சென்னை : 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக வெளியான செய்தி வதந்தி எனக் கூறியுள்ள தமிழக மின்வாரியம், இது தொடர்பான விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.
-
மும்பை விளம்பர பதாகை விபத்து: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றம்
17 May 2024சென்னை : மும்பையில் விளம்பர பதாகை விழுந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு
-
சுப்ரீம்கோர்ட்டின் வழக்கறிஞர் சங்க தலைவராக கபில்சிபல் தேர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
17 May 2024சென்னை : சுப்ரீம் கோர்ட்டின் வழக்கறிஞர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கபில் சிபலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம்
17 May 2024சென்னை : குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழு
-
மருத்துவ கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
17 May 2024சென்னை : மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
போதை பொருள் புழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
17 May 2024சென்னை : தமிழகத்தில் அதிகரிக்கும் போதை பொருள் புழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3000 கனஅடியாக நீடிப்பு
17 May 2024தருமபுரி : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
உடல்நலம் பாதிப்பு: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் திடீர் மரணம்
17 May 2024கோவை : உடல்நலம் பாதிப்பு காரணமாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் நேற்று மரணமடைந்தார்.
-
துரைமுருகன் - டி.ஆர்.பாலுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
17 May 2024சென்னை : அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன் - டி.ஆர்.பாலுவுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார்.
-
பொது இடமாறுதல் கலந்தாய்வு: தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடதல் அவகாசம் : மே 25 வரை நீட்டித்தது பள்ளிக்கல்வித்துறை
17 May 2024சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை பள்ளிக்கல்வித் துறை மே 25-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
-
குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு
17 May 2024தென்காசி : பழைய குற்றாலத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான சிறுவனை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.
-
கோயம்பேட்டில் இருந்து தி.மலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்க முடிவு : போக்குவரத்து துறை அறிவிப்பு
17 May 2024சென்னை : சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 23-ம் தேதி முதல் தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை
-
3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
17 May 2024சென்னை : தேனி தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் 4 நாட்களுக்குகனமழை பெய்ய வாய்ப்புள்ளதா
-
மத்தியில் ஆட்சி அமைத்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் : காங்கிரஸ் கட்சி வாக்குறுதி
17 May 2024புதுடில்லி : மத்தியில் ஆட்சி அமைத்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
-
வான்கார்ட் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.வாக சலீம் ராம்ஜி நியமனம்
17 May 2024நியூயார்க் : உலகின் முன்னணி முதலீட்டு மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான வான்கார்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.).
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 2 கி.மீ. வரிசையில் நின்று தரிசனம்
17 May 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இலவச தரிசனத்திற்காக 2 கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
-
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம்
17 May 2024விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சந்துருவை ஜப்பான் நாட்டின் ஓசாகா பகுதி தூதுவராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
சூர்யகுமார், பும்ராவிற்கு ஆதரவு
17 May 2024பாலிவுட் நட்சத்திரங்களான அமீர்கான், சல்மான்கான் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் ஒன்றாக நடித்தால் மட்டும் அந்த படம் ஓடாது என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
-
நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள் : பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
17 May 2024புதுடெல்லி : நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
மும்பையில் விளம்பர பலகை விழுந்த சம்பவம்: தலைமறைவாக இருந்த தொழிலதிபர் கைது
17 May 2024ஜெய்ப்பூர் : மும்பையில் விளம்பர பதாகை விழுந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த தொழிலதிபர் பாவேஷ் பிண்டேவை உதய்பூரில் கைது செய்த போலீசார் நேற்று மும்பைக்கு அழைத்து வந்த
-
உக்ரைன் மீதான போருக்கு அரசியல் தீர்வுதான் வழி : ரஷ்யா, சீனா கருத்து
17 May 2024பெய்ஜிங் : உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அரசியல் தீர்வுதான் சரியான வழி என்று புடின், ஜி ஜின்பிங் இருவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எனக்கு நடந்ததை அரசியலாக்க வேண்டாம்: பாரதிய ஜனதாவுக்கு ஆம் ஆத்மி பெண் எம்.பி. வேண்டுகோள்
17 May 2024புதுடில்லி : நான் தாக்கப்பட்ட விவகாரத்தை பா.ஜ., அரசியலாக்க வேண்டாம்'', என ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார்.
-
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை வரை நீட்டிப்பு
17 May 2024சென்னை : கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி.
-
6-ம் கட்ட பார்லி. தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு
17 May 2024புதுடெல்லி : 6-ம் கட்ட பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளது.