முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்

வியாழக்கிழமை, 2 மே 2024      இந்தியா
Modi-1 2023 04 03

Source: provided

புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று மாலை மேற்கு வங்கத்தில் நடைபெறும் பேரணியில் பங்கேற்றார். கொல்கத்தா வரும் மோடி இரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார். கிருஷ்ணாநகர், பர்தமான் புர்பா மற்றும் போல்பூர் மக்களவைத் தொகுதிகளில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் தேர்தல் பேரணிகளில் மோடி பேச உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் வருகையையொட்டி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் வருகை காரணமாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் தனது தனிப்பட்ட பயணத்தைத் தவிர்த்துள்ளார். இதற்கிடையில், கொல்கத்தா போக்குவரத்து காவல்துறை, பிரதமரின் வருகையை முன்னிட்டு நகரின் சில பகுதிகளில் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து