எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நியூயார்க் : டி-20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றோடு 3 முக்கிய அணிகளான பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் வெளியேறியுள்ளது அந்த அணிகளின் ரசிகர்களை அதிச்சியடைய செய்துள்ளது.
3 புதிய அணிகள்...
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணிகளை தவிர மற்ற அணிகள் மிகப்பெரிய அளவில் அனுபவம் இல்லாத அணிகள். நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற அணிகளுக்கு ஓரளவு அனுபவம் உள்ளது. கனடா, அமெரிக்கா, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம் பொன்ற அணிகள் தற்போதுதான் உலகக் கோப்பை தொடரில் விளையாடுகின்றன.
கத்துக்குட்டி அணிகள்...
முன்னணி அணிகளிடம் இந்த கத்துக்குட்டி அணிகள் என்ன பாடுபடப்போகிறதோ என விமர்சகர்கள் தெரிவித்தனர். ஆனால் மிகப்பெரிய அணிகளுக்கு இந்த அணிகள் அதிர்ச்சி அளித்துள்ளது. அத்துடன் முக்கியமான அணிகள் வெளியாக காரணமாக அமைந்தன. "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம் பிடித்திருந்தன. இரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எளிதாக முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானை அமெரிக்கா சூப்பர் ஓவரில் வீழ்த்தியது. இதனால் பாகிஸ்தான் சூப்பர் 8 வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது. இதே பிரிவில் சற்று கூடுதல் அனுபவம் வாய்ந்த அயர்லாந்து அணியை கனடா வீழ்த்தியது.
ஆஸி., முன்னேற்றம்...
குரூப் "பி" பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஸ்காட்லாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் இங்கிலாந்து வெளியேறும் நிலை ஏற்படும். நமீபியாவுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டாலும் இங்கிலாந்து வெளியேறிவிடும்.
ஆப்கான் - மே.இ.தீவுகள்...
குரூப் "சி"-யில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் ஆப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அதை நிரூபிக்கும் வகையில் நியூசிலாந்தை வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் நியூசிலாந்தை வீழ்த்தியதால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
தென் ஆப்பிரிக்கா...
குரூப் "டி"-யில் தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன. தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு எதிராக இலங்கை தோல்வியை சந்தித்தது. இதனால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. வங்காளதேசம் கடைசி போட்டியில் நேபாளத்தை வீழ்த்தியதால் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேபாளத்திற்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முதல் சுற்றோடு...
அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தோற்றதனாலும், ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் நியூசிலாந்து தோல்வியடைந்ததாலும், தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு எதிராக இலங்கை அணி தோல்வியடைந்ததாலும் பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் முதல் சுற்றோடு உலக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமி சுமித் அபார சாதனை
06 Jul 2025பர்மிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.
-
அரசு பங்களாவை காலி செய்யாதது ஏன்? முன்னாள் நீதிபதி சந்திரசூட் விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: தான் அரசு பங்களாவை காலி செய்யாததற்கான காரணத்தை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கியுள்ளார்.
-
2025-2026 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்
06 Jul 2025சென்னை: 2025-2026 கல்வி ஆண்டுகான பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
-
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் * லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் * பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் குவிப்பு
06 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெறுகிறது.
-
இங்கி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்தியா
06 Jul 2025பர்மிங்காம்: ஆகாஷ் தீப் அபார பந்து வீச்சு காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.
-
முதல்வரின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கீழ் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை தமிழ்நாடு அரசு பெருமிதம்
06 Jul 2025சென்னை: முதல்வரின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கலைஞர் மகளிர் உ
-
வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சூறாவளி சுற்றுப்பயணம்
06 Jul 2025சென்னை: அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
-
சென்னையில் மினி மாரத்தான் போட்டி: அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
06 Jul 2025சென்னை: சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், சென்னை மேயர் ஆகியோர் பங்கேற்றனர்.
-
நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளியை சந்தித்து நலம் விசாரித்தார் மா.சுப்பிரமணியன்
06 Jul 2025சென்னை: நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் நலம் விசாரித்தார்.
-
ஜூலை 8-ல் த.வெ.க. பயிற்சி பட்டறை ஆலோசனைக்கூட்டம்
06 Jul 2025சென்னை: த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம், ஜூலை 8ம் தேதி பனையூரில் நடக்க உள்ளதாக அக்கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி