எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : எதிரிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை வீழ்த்தினார்களா என்ற கோணத்தில் கொலை வழக்கு சென்று கொண்டிருக்க பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி, பெரம்பூரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் வந்த கும்பல், கட்டுமான பணியை பார்வையிட்டுக்கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினர். தமிழ்நாடு முழுவதும் இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த கொலை வழக்கில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
பிரபல ரவுடியாக இருந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் இந்த கொலை நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேரை கொலை நடந்த அன்றைய இரவே போலீசார் கைது செய்தனர்.
11 பேரிடம் 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடைபெற்றது. அப்போது, போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் 'என்கவுண்ட்டரில்' போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனிடையே மற்ற 10 கொலையாளிகளும், போலீஸ் காவல் முடிந்து, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக பெண் வழக்கறிஞர் மலர்கொடி, மற்றொரு வழக்கறிஞர் ஹரிஹரன், ஏற்கனவே கைதான அருளின் உறவினர் சதீஷ் ஆகிய 3 பேரை போலீசார் கடந்த 3 தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். வடசென்னை பா.ஜ.க. பெண் பிரமுகர் அஞ்சலையும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தலைமறைவான அவரையும் கைது செய்வதற்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலையாளிகள் பயன்படுத்திய 3 கார்கள், 4 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து போலீஸ் விசாரணையில் அடுத்தடுத்து பல்வேறு பகீர் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டதாவது:- இந்த வழக்கில் கைதான கொலையாளிகள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்துள்ளனர். தற்போது கைதாகியுள்ள வழக்கறிஞர் மலர்கொடியின் கணவர் தோட்டம் சேகர் பிரபல அரசியல் கட்சியில் பிரசார பாடகராக இருந்துள்ளார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். மலர்கொடியின் மகன் அழகுராஜாவும் கொலைவழக்கில் சிக்கி உள்ளார். மலர்கொடி சென்னை அண்ணாசாலை பகுதியில் ஆட்டோவில் வரும்போது அவர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்வதற்கு முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங்கை பொறுத்தவரையில் அவருக்கு பல்வேறு குழுக்கள் எதிரிகளாக செயல்பட்டு வந்துள்ளனர். ஆற்காடு சுரேஷ் கொலைவழக்கில் பழி தீர்க்க ஒரு கும்பல் வெறியோடு செயல்பட்டுள்ளது. இதனிடையே வடசென்னையில் பிரபல தாதாவாக வலம் வந்து தற்போது சிறையில் இருக்கும் ஒருவரும் இந்த கொலைக்கு பின்னணியில் இருந்ததாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மற்றொரு புறம் வடசென்னையில் ஆம்ஸ்ட்ராங் செல்வாக்குமிக்க தலைவராக உருவாகி வந்தது வேறு ஒரு கும்பலின் கண்களை உருத்தி உள்ளது. இப்படி பல்வேறு தரப்பட்ட எதிரிகள், ஒரே குழுவாக கைக்கோர்த்து, ஆம்ஸ்ட்ராங்கை வீழ்த்தி இருப்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
கொலையாளிகளுக்கு ரூ,50 லட்சத்தில் இருந்து ரூ,1 கோடி வரை கூலிப்பணமாக கைமாறி இருப்பதாகவும் இன்னொரு அதிர்ச்சி தகவல் சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் உள்ளது. இந்த பண பரிமாற்றத்துக்கு அருள் முக்கிய நபராக செயல்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது வங்கி கணக்கை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். வக்கீல் அருள், பொன்னை பாலு, திருமலை ஆகிய 3 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
மொத்தத்தில் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட பல்வேறு எதிரிகளை ஒருங்கிணைத்து காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு மூளையாக இருந்தது யார்? என்பது தான் தற்போது போலீஸ் விசாரணையில் முக்கிய அம்சமாக உள்ளது. இதுவரையில் விசாரணை நேர்கோட்டில் செல்வதாகவும், இந்த வழக்கில் யார்-யார்? பின்னணியில் இருந்தார்களோ, அவர்கள் அனைவரையும் கூண்டில் ஏற்றுவோம் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
பாக்., ஏவியது ஷாஹீன் ஏவுகணை: இந்திய ராணுவம் ஆய்வில் தகவல்
19 May 2025புதுடில்லி : ஷாஹீன் ஏவுகணை பாகிஸ்தான் ஏவியது இந்திய ராணுவம் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
-
'லெவன்' திரை விமர்சனம்
19 May 2025சென்னையில் மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடக்கிறது. இறந்தவர்கள் யார்?
-
மீண்டும் 70 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
19 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.70,040க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-05-2025
19 May 2025 -
கனமழை- புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
19 May 2025சென்னை, அதிக கனமழை – புயலை ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் உதவி கேட்டு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்
-
குமரி கண்ணாடி பாலத்தை 1.25 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
19 May 2025கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை 11 நாட்களில் 1.25 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.
-
வி.என்.ஜானகி தியாகங்கள் போற்றத்தக்கது: ஓ.பன்னீர்செல்வன் புகழாரம்
19 May 2025சென்னை, எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான வி.என்.ஜானகியின் தியாகங்கள் போற்றத்தக்கது என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார் இது குறித்து அ.த
-
பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்: நைஜீரியாவில் 57 பேர் பலி
19 May 2025அபுஜா : நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது: தலைமை நீதிபதி
19 May 2025மும்பை : இந்தியாவின் அரசமைப்பே உச்சபட்ச அதிகாரம் கொண்டது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
-
நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: வேகமாக நிரம்பும் ஓசூர் கெலவரப்பள்ளி அணை
19 May 2025ஓசூர் : தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து 904 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
ரூ.211.57 கோடியில் கோவை மத்திய சிறைச்சாலைக்கு புதிய கட்டடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
19 May 2025சென்னை, 457 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1,118 காவலர் குடியிருப்புகள் மற்றும் 211 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கோயம்புத்தூர் மத்
-
இந்த வாரம் வெளியாகும் ' ஏஸ் '
19 May 20257CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘ஏஸ்' ( ACE).
-
தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜோ பைடன் விரைவில் குணமடைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து
19 May 2025வாஷிங்டன் : ஜோ பைடனுக்கு புற்றுநோய் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் குணமடைய வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
ஆந்திரப்பிரதேசத்தில் சோகம்: கார் கதவுகள் மூடியதால் மூச்சு திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு
19 May 2025அமராவதி : ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயநகரத்தில் கார் கதவுகள் மூடியதால் மூச்சுத் திணறி 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.
-
மே 29-ல் சிக்கிம் செல்கிறார் பிரதமர் மோடி?
19 May 2025ஷில்லாங் : சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்றதன் 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மே 29 அன்று சிக்கிம் செல்ல வாய்ப்புள்ளதாக முதல்வர் பி
-
கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
19 May 2025புதுடில்லி : விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசின் கணினி அவசரநிலை கண்காணிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
'படைத்தலைவன்' இசை வெளியீடு
19 May 2025இயக்குநர் யு அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்தின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், “படை தலைவன்”. இப்படம் வரும் மே 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
-
டிடி நெக்ஸ்ட் லெவல் திரை விமர்சனம்
19 May 2025யூடியுப் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் சந்தானத்திற்கு ஒரு திரைப்படத்தின் சிறப்பு திறையிடல் நிகழ்ச்சிக்கான அழைப்பு வருகிறது.
-
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி காப்பீட்டு சலுகை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வங்கிகள் ஒப்பந்தம்
19 May 2025சென்னை, முதல்வர். மு.க.
-
ஜோரா கைய தட்டுங்க திரை விமர்சனம்
19 May 2025மேஜிக் கலைஞரின் மகனான யோகி பாபு, தந்தை இறப்புக்குப் பிறகு மேஜிக் கலைஞராகி விடுகிறார். ஆனால், அவரது மேஜிக் பிடிக்காமல் மக்கள் விமர்சிக்கிறார்கள்.
-
தமிழ்நாட்டில் கொலை வழக்குகள் குறைந்துள்ளன: டி.ஜி.பி. அறிக்கை
19 May 2025சென்னை : தமிழ்நாட்டில் கொலை வழக்குகள் குறைந்துள்ளதாக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
-
கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
19 May 2025சென்னை, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வரும் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
’மாமன்’ திரை விமர்சனம்
19 May 2025சூரி, தனது அக்கா சுவாஷிகா மீது அன்பாக இருக்கிறார். திருமணமாகி 10 வருடங்களுக்குப் பிறகு அவரது அக்காவுக்கு குழந்தை பிறக்கிறது.
-
வணிகவரித்துறைக்கு 23 புதிய வாகனங்கள் அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
19 May 2025சென்னை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல்
-
சர்வதேச பிரச்சாரம்: அனைத்துக் கட்சி குழுவிலிருந்து திரிணமூல் விலகல்
19 May 2025புதுடெல்லி, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்காக பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பல கட்சிக் குழுவில் இருந்து விலகுவதாக திரிணமூல் கா