எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கோவை : போலீஸ் அக்கா திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு கல்லூரியில் வேலை பார்த்த தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும் அரங்கேறியது.
இப்படி தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் பெண்கள், மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை தடுப்பது தொடர்பாகவும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் மாவட்ட கலெக்டர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர்கள், போலீசார், கல்லூரி முதல்வர்கள் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர். அதில் முக்கியமாக கோவை மாநகர போலீசார் தாங்கள் செயல்படுத்தி வரும் போலீஸ் அக்கா திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், அது மாணவிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாகவும் மாநகர போலீஸ் சார்பில் அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கோவையில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுவதால், இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது. கோவையில் கல்லூரி மாணவிகளிடம் வரவேற்பை பெற்ற போலீஸ் அக்கா திட்டம் பற்றிய விவரம் வருமாறு:-
கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் உளவியல், பாலியல் ரீதியாக என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆனால் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்களால் பெற்றோரிடமோ, கல்லூரி நிர்வாகம் என யாரிடமும் சொல்ல முடிவதில்லை. தயக்கத்தால் அதனை சொல்லாமல் தங்கள் மனதுக்குள்ளேயே போட்டு மூடி மறைத்து கொள்கின்றனர்.
இதனால் சில நேரங்களில் சிலர் தவறான முடிவுகளை எடுப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். அப்படி மாணவிகள் எந்த தவறான முடிவையும் எடுக்காமல் இருக்கவும், அவர்கள் தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டு தெரிவிப்பதற்காகவும் தொடங்கப்பட்டது தான் போலீஸ் அக்கா திட்டம்.இந்த திட்டமானது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கும் பாலகிருஷ்ணன் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார்.
விரைவில் தமிழகம் முழுவதும் போலீஸ் அக்கா திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த திட்டம் வருவதன் மூலம் மாணவிகள் தாங்கள் சொல்ல முடியாத பிரச்சினைகளை கூட போலீஸ் அக்காவிடம் தெரிவித்து தீர்வு காணமுடியும். இதேபோல் கல்லூரி மாணவர்கள் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் போலீஸ் புரோ திட்டமும் கோவை மாநகரில் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சஞ்சு சாம்சனை வாங்க பேச்சுவார்த்தை
08 Nov 2025ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
-
தொகுதிவாரியாக நேர்காணல்: கிருஷ்ணகிரி தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
08 Nov 2025கிருஷ்ணகிரி : ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் வெற்றி பெறவில்லையென்றால் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவி பறிபோகும் என கிருஷ்ணகிரி தி.மு.க.
-
59-வது பிறந்தநாள்: சீமானுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
08 Nov 2025சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் காயம்: வரும் 14-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு திரும்புவாரா ரிஷப் பண்ட்?
08 Nov 2025பெங்களூரு : பெங்களூருவில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் காயமட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-11-2025.
08 Nov 2025 -
தருமபுரியில் இன்று பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப்பயண நிறைவு விழா
08 Nov 2025தருமபுரி : தருமபுரியில் பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப் பயண நிறைவு விழா இன்று நடக்கிறது.
-
சாதி, மத மோதலை உருவாக்குகிறது: காங்கிரஸ் மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
08 Nov 2025சசராம் : மக்களிடையே சாதி, மத மோதலை உருவாக்குகிறது என்று காங்கிரஸ் கட்சி மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டியுள்ளார்.
-
ஆந்திரா-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
08 Nov 2025சேலம் : ஆந்திரா - கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்ததால் சர்ச்சை
08 Nov 2025பாட்னா : பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டு திருத்த புதிய வசதி
08 Nov 2025டெல்லி : செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டை திருத்த புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.
-
உல்லாசத்திற்கு இடையூறு; கணவரை கொன்ற மனைவி
08 Nov 2025மீரட் : உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனை ஏவி கழுத்தை நெரித்து கொன்ற மனைவியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: சிறுவனின் தாக்குதலில் பெண் உயிரிழப்பு
08 Nov 2025இட்டாநகர் : பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சிறுவனின் கொடூர தாக்குதலில் 40 வயது பெண் உயிரிழந்தார்.
-
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்பு : ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Nov 2025துபாய் : 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ளதாக ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
08 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து நேற்று 3-வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
சீமானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
08 Nov 2025சென்னை : சீமானின் கொள்கையில் பிடிவாதம் வியத்தலுக்குரியவை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
6 நாட்கள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
08 Nov 2025டெல்லி : அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா ஜனாதிபதி திரெளபதி முர்மு புறப்பட்டு சென்றார்.
-
மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டி: நேரலையில் 18.5 கோடி பேர் கண்டுகளித்து புதிய சாதனை
08 Nov 2025மும்பை : இந்தியாவில் மகளிர் உலககோப்பை போட்டியில் அதிக அளவிலான பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கடைசி டி-20 போட்டி மழையால் ரத்து: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா
08 Nov 2025பிரிஸ்பேன் : கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
-
உத்தரபிரதேச மாநிலத்தில் விபரீதம்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் திடீர் தற்கொலை
08 Nov 2025லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
98-வது பிறந்தநாளை முன்னிட்டு அத்வானிக்கு பிரதமர் வாழ்த்து
08 Nov 2025டெல்லி : பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் 98-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
-
கரூர் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது த.வெ.க.
08 Nov 2025கரூர் : கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ.யிடம் ஆதாரங்களை த.வெ.க. ஒப்படைத்தது.
-
துணை ஜனாதிபதி கர்நாடகா பயணம்
08 Nov 2025டெல்லி : துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கர்நாடகாவுக்கு இன்று செல்கிறார்.
-
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் மட்டும் 6,453 மெட்ரிக் டன் அளவு கேழ்வரகு கொள்முதல் : அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
08 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் து
-
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் : 484 முகாம்கள் நடத்தப்பட்டு 7,57,168 பேர் பயன்: அமைச்சர்
08 Nov 2025சென்னை, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: 484 முகாம்கள் நடத்தப்பட்டதில் 7 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
-
வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு: ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம்: ராஜ்நாத் பேச்சு
08 Nov 2025பாட்னா : வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு குறித்து ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


