முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை புத்தக கண்காட்சி நிறைவு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      தமிழகம்
Book 2024-01-21

Source: provided

சென்னை : சென்னை நந்தனத்தில் நடைபெற்று வந்த புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.

சென்னை நந்தனத்தில் டிச.27-ஆம் தேதி தொடங்கிய பபாசி-இன் 48-வது சென்னை புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. புத்தகக் கண்காட்சியில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு வகையான தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

புத்தகக் கண்காட்சி வார நாள்களில் பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும் நடைபெற்று வந்தது. நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின் நிறைவு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பங்கேற்றார். புத்தகக் கண்காட்சியின் தேதி நீட்டிக்கப்படுவதாக, சமீபத்தில் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.

இருப்பினும், புத்தகக் கண்காட்சி நீட்டிப்பு தேதி குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மையல்ல என்றும், திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமையுடன் புத்தகக் கண்காட்சி நிறைவு பெறுவதாகவும் பபாசி செயலர் முருகன் விளக்கமளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து