எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடில்லி, டெல்லி சட்டப்பேரவை தோ்தலில் ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ள பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், ஆட்சியைப் பறிகொடுத்த ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வென்றுள்ளன. ஆம் ஆத்மியின் அமைப்பாளா் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின், செளரவ் பரத்வாஜ் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பலரும் அதிா்ச்சித் தோல்வி அடைந்தனா்.
2020 தோ்தலில் எட்டு இடங்களில் மட்டுமே வென்ற பா.ஜ.க. , இம்முறை கூடுதலாக 40 இடங்களில் வென்றுள்ளது. 2015-இல் 67 இடங்களிலும் 2020-இல் 62 இடங்களிலும் பெரும்பான்மை பலத்துடன் வென்ற ஆம் ஆத்மி கட்சி, இம்முறை 22 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
முதல்வா் அதிஷி, அமைச்சா்கள் கோபால் ராய், இம்ரான் ஹுசேன், முகேஷ் குமாா் அலாவத் ஆகியோா் தங்களின் தொகுதிகளில் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டனா்.
புது டில்லி: இங்கு முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க. வேட்பாளா் பா்வேஷ் சாஹிப் சிங்கிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றாா். இந்தத் தொகுதியில் கடந்த 2013 முதல் தொடா்ந்து ஷீலா தீட்சித்தை தோற்கடித்தவா் கெஜ்ரிவால். இம்முறை இங்கு களம் கண்ட ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்தும் இங்கு பா.ஜ.க. விடம் தோல்வியைத் தழுவினாா்.
கால்காஜி: இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் ரமேஷ் பிதூரியை விட 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தக்க வைத்துக்கொண்டாா் முதல்வா் அதிஷி. இத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் அல்கா லாம்பா களம் கண்டாா். முந்தைய தோ்தலில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளா் தரம்பீா் சிங்கை விட 11,393 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தாா் அதிஷி.
சுல்தான்பூா் மஜ்ரா: டில்லி அமைச்சா் முகேஷ் குமாா் அலாவத், 17,126 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டாா். அவருக்கு எதிராக பா.ஜ.க. சாா்பில் கரம் சிங் கா்மாவும், காங்கிரஸ் சாா்பில் ஜெய் கிஷணும் போட்டியிட்டனா். 2020 தோ்தலில் பா.ஜ.க. வின் ராம் சந்தா் செளரியாவை 48,052 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவா் முகேஷ் குமாா் அலாவத்.
பல்லிமாரன்: இத்தொகுதியில் டில்லி அமைச்சா் இம்ரான் ஹுசேன், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வின் கமல் பாக்ரியை விட 29,823 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். 2015, 2020 ஆண்டுகளில் நடந்த தோ்தலிலும் அவா் இதே தொகுதியில் வெற்றி பெற்றாா்.
கிரேட்டா் கைலாஷ்: டில்லி சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாத், பா.ஜ.க. வின் ஷிகா ராயிடம் 3,188 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றாா். இத்தொகுதியில் 2013, 2015, 2020 ஆகிய தோ்தல்களில் வென்றிருந்தாா் செளரவ் பரத்வாஜ்.
ஷகுா் பஸ்தி: முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சத்யேந்தா் ஜெயின், பா.ஜ.க. வின் கா்னைல் சிங்கிடம் 20,998 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். இவரும் 2013, 2015, 2020 தோ்தல்களில் இதே தொகுதியில் வெற்றி பெற்றவா்.
காரவால் நகா்: பா.ஜ.க. வின் கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி வேட்பாளா் மனோஜ் தியாகியை 23,355 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா். 2015-இல் இதே தொகுதியில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு வென்ற கபில் மிஸ்ரா, சமீபத்திய சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக பா.ஜ.க. வில் சோ்ந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹிணி: பா.ஜ.க. வின் விஜேந்தா் குப்தா இத்தொகுயில் 37,816 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளா் பா்தீப் மித்தலை வீழ்த்தி தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டாா். 2015, 2020 தோ்தல்களிலும் இத்தொகுதியில் விஜேந்தா் குப்தா வென்றிருந்தாா்.
பட்கா்கஞ்ச்: பா.ஜ.க. வேட்பாளா் ரவீந்தா் சிங் நேகி, ஆம் ஆதமி கட்சியில் புதிதாக சோ்ந்த அவத் ஓஜாவை 28,072 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா். இத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் களம் கண்ட அனில் செளத்ரி 16,549 வாக்குகளைப் பெற்றாா். 2013, 215, 2020 ஆகிய தோ்தல்களில் தொடா்ந்து வெற்றி பெற்ற முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா இம்முறை ஜங்புராவுக்கு சென்றதையடுத்து இங்கு போட்டியிடும் வாய்ப்பு புதியவரவான அவாத் ஓஜாவுக்கு கிடைத்தது.
ஜங்புரா: இத்தொகுதியில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா பா.ஜ.க. வின் தா்வீந்தா் சிங் மாா்வாவிடம் 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாா். 2013-ஆம் ஆண்டு முதல் இத்தொகுதியை ஆம் ஆத்மி கட்சி தக்க வைத்து வந்தது.
சாந்தினி செளக்: இங்கு ஆம் ஆத்மியின் புனா்தீப் சிங் சாஹ்னே 17,126 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளா் சதீஷ் ஜெயினை வீழ்த்தினாா். இங்கு 2013-இல் காங்கிரஸின் பா்லாத் சிங் சாஹ்னே வெற்றி பெற்றாா். 2015-இல் தற்போது காங்கிரஸில் உள்ள அல்கா லங்ம்பா ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு இங்கு வெற்றி பெற்றாா். 2020-இல் ஆம் ஆத்மியின் பா்லாத் சிங் சாஹ்னே இங்கு வெற்றி பெற்றாா்.
ஓக்லா: இத்தொகுதியின் எம்எல்ஏவான அமானத்துல்லா கான், பா.ஜ.க. வேட்பாளா் மனீஷ் செளத்ரியை விட 23,639 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டாா். 2015 முதல் இத்தொகுதியை தொடா்ந்து இவா் தன்வசத்தில் வைத்துள்ளாா்.
பிஜ்வாசன்: முன்னாள் அமைச்சா் கைலாஷ் கெலோட் டில்லி தோ்தலுக்கு முன்பாக பா.ஜ.க. வில் சோ்ந்து இத்தொகுதியில் களம் கண்டு 11,276 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். இங்கு காங்கிரஸின் தேவிந்தா் குமாா் செஹ்ராவத்தும் ஆம் ஆத்மியின் சுரேந்தா் பரத்வாஜும் களத்தில் இருந்தனா். பாத்லி: இங்கு பா.ஜ.க. வின் ஆஹிா் தீபக் செளத்ரி, டில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவை 15,163 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளாா். ஆம் ஆத்மியின் அஜேஷ் யாதவும் இங்கு களத்தில் இருந்தாா்.
கரோல் பாக்: ஆம் ஆத்மியின் விசேஷ் ரவி 2013 முதல் இங்கு சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளாா். இத்தோ்தலில் பா.ஜ.க. வின் தேசிய பொதுச்செயலரும் தலித் சமூகத் தலைவருமான துஷ்யந்த் கெளதமை 7,430 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளாா்.
பாபா்பூா்: டில்லி அமைச்சா் கோபால் ராய், பா.ஜ.க. வின் அனில் குமாா் வசிஷ்தை விட 18,994 வாக்குகள் கூடுதலாகப் பெற்று 2015, 2020 ஆண்டுகளைப் போலவே இத்தொகுதியைத் தக்க வைத்துள்ளாா். இவரை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் முகம்மது இஷ்ரக் கான் களத்தில் இருந்தாா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ட்ரம்ப் - புதின் உரையாடலுக்கு பின்பு ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
19 Mar 2025கீவ் : போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ட்ரம்ப் - புதின் உரையாட லுக்கு பின்பு ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டினார்.
-
பொது இடங்களில் உள்ள தி.மு.க. கொடிக்கம்பங்களை அகற்ற துரைமுருகன் அறிவுறுத்தல்
19 Mar 2025சென்னை : சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இணங்கி பொது இடங்களில் உள்ள தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-03-2025.
19 Mar 2025 -
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
19 Mar 2025சென்னை : தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையானது.
-
சென்னையில் ரூ.2 ஆயிரம் மாதாந்திர பேருந்து பயண அட்டை அறிமுகம் : அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்
19 Mar 2025சென்னை : சென்னையில் ரூ.2 ஆயிரம் மாதாந்திர ஏ.சி. பஸ் பயண அட்டையை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.
-
திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்
19 Mar 2025திருப்பரங்குன்றம் : அறுபடை வீடுகளில் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்ப ரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற
-
தமிழக கவர்னர் இன்று சென்னை திரும்புகிறார்
19 Mar 2025சென்னை : கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை திரும்புகிறார்.
-
ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்க நடவடிக்கை : சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
19 Mar 2025சென்னை : ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து சட்டசபையில் அமைச்சர் அர.சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.
-
மிரட்டும் தொணியில் பேசுவதா? - அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
19 Mar 2025சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் நேற்று காலை தொடங்கி நடைபெற்றது.
-
சென்னைக்கு தடை இல்லாமல் குடிநீர் விநியோகம் இருக்கும் : அமைச்சர் கே.என்.நேரு தகவல்
19 Mar 2025சென்னை : சென்னைக்கு தடை இல்லாமல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
திடக்கழிவில் இருந்து உரம் விவசாயிகளுக்கு விலை இன்றி வழங்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு
19 Mar 2025சென்னை : திடக்கழிவில் இருந்து உரம் விவசாயிகளுக்கு விலை இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
-
ஆவின் மூலம் கூடுதல் பால் கொள்முதல் : சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
19 Mar 2025சென்னை : ஆவின் மூலம் கடந்த ஆட்சியை விட கூடுதலாக 11 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
-
பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 217 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ்
19 Mar 2025சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 217 பணிநாடுநர்களுக்கு பணிநியமன
-
காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை
19 Mar 2025ஸ்ரீநகர் : எல்ல தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான விசாரணையில் ஜம்மு காஷ்மீரில் 12 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது.
-
சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார் - மஸ்க்
19 Mar 2025வாஷிங்டன் : சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார் என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
-
6 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 22-ம் தேதி மணிப்பூர் பயணம் : பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டம்
19 Mar 2025புதுடெல்லி : மணிப்பூரில் கலவரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 22-ம் தேதி பயணம் மேற்கொள்கின்றனர்.
-
தெரு நாய்கள் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு : சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
19 Mar 2025சென்னை : தெரு நாய்கள் கடித்து மரணிக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 7 ஆந்திர எம்.எல்.ஏ.க்களுக்கு இடம்
19 Mar 2025திருப்பதி : இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 7 ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
தமிழக மீனவர்கள் பிரச்சினை: வைகோ குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்
19 Mar 2025புதுடெல்லி : இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் வைகோ குற்றச்சாட்டுககு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து உள்ளார்.
-
புதுச்சேரியில் வீடுதோறும் 20 லிட்டர் இலவச குடிநீர் கேன் வழங்கு திட்டம் : தமிழ் புத்தாண்டில் தொடக்கம்
19 Mar 2025புதுச்சேரி : புதுச்சேரியில் வீடுதோறும் இலவச குடிநீர் கேன் வழங்கு திட்டம் தமிழ் புத்தாண்டு முதல் தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட ரெயில்வே தேர்வு-தேர்வர்கள் அதிர்ச்சி
19 Mar 2025புதுடெல்லி : ரெயில்வே துறையில் காலியாக உள்ள லோகோ பைலட் உள்ளிட்ட பணிகளுக்கு, குரூப்-டி நிலையிலான காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நேற்று (புதன்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப
-
பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது: தமிழ்நாடு அரசு
19 Mar 2025சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
-
மறைந்த அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டிய தேவை என்ன? - வேல்முருகன் கேள்வி
19 Mar 2025சென்னை : அவுரங்கசீப் கல்லறையை இடித்து அகற்ற வேண்டிய தேவை என்ன என்று தமீழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
9 மாதம் இடைவெளிக்கு பிறகு பூமிக்கு திரும்பிய சுனிதாவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
19 Mar 2025சென்னை : 9 மாதம் இடைவெளிக்கு பிறகு பூமி திரும்பிய, விண்வெளி வீரர் சுனிதாவுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்; பூர்வீக கிராமத்தில் கொண்டாட்டம்
19 Mar 2025காந்திநகர் : பூமிக்கு திரும்பியதை அடுத்து சுனிதா வில்லியம்ஸின் பூர்வீக கிராமத்தில் கொண்டாடப்பட்டது.