எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்திய அணிக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடுகளில் ஒன்று தங்களுக்கென பிரத்யேக சமையல் கலைஞர்களை உடன் அழைத்து வரக்கூடாது என்பதாகும். தற்போது உடற்தகுதிக்கு பலரும் முக்கியத்துவம் அளித்து வருவதால் தங்களுக்கு என தனி உணவு, அதை ஏற்பாடு செய்ய தனி சமையல் கலைஞர்கள் என சில வீரர்கள் வைத்திருந்தனர். ஆனால் தற்போது இந்திய வீரர்கள் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் உணவுகளைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தனியாக உனக்கென சமையல் ஆட்களை வைத்திருக்கக் கூடாது என்று பி.சி.சி.ஐ. உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் விராட் கோலி தனது உடற்தகுதியை கருத்தில் கொண்டு அதற்கேற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதற்காக அதிரடி முடிவு ஒன்றினை எடுத்துள்ளார். அந்த வகையில் தனக்கென பிரத்தியேகமாக சமையல் கலைஞர்களை அழைத்து வராமல் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனக்கு ஏற்றவாறு உணவுகளை சமைக்க சொல்லி அதனை இந்த தொடர் முழுவதும் டெலிவரி செய்யும் வகையில் ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரது அந்த கோரிக்கையை ஏற்ற ஓட்டல் நிர்வாகமும் அவருக்கு உணவினை சரியான முறையில் டெலிவரி செய்து வருகிறது.
_____________________________________________________________________________________
விதர்பா 308 ரன்கள் குவிப்பு
ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டி ஒன்றில் மும்பைக்கு எதிராக முதல் நாளில் விதர்பா 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்துள்ளது. 90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 32 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் லீக் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் குஜராத், கேரளா, விதர்பா மற்றும் மும்பை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.
இதில் நாக்பூரில் நடைபெற்று வரும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் மும்பை - விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி ஆரம்பம் முதலே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன அதர்வா தைடே (4 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்தாலும், பின்னர் களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். மும்பை தரப்பில் ஷாம்ஸ் முலானி மற்றும் ஷிவம் துபே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர். நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
_____________________________________________________________________________________
ஆப்கனுக்காக விளையாட விருப்பம்
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் அணி வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகும் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாட விரும்புவதாக அந்த அணியின் மூத்த வீரர் முகமது நபி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னுடைய எதிர்காலம் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது ஆப்கானிஸ்தான் அணிக்காக நான் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டிகளாக இருக்காது என நினைக்கிறேன். சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்த பிறகும், சில ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். இது குறித்து மூத்த வீரர்களிடம் ஆலோசனை செய்துள்ளேன். நான் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது எனது உடல் தகுதியை பொருத்தே அமையும் என்றார். ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரரான முகமது நபிக்கு 40 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________________
அணியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என்று தெரியவில்லை..? - இந்திய வீரர் வருத்தம்
இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து ரகானே சில கருத்துகளை கூறியுள்ளார்.;
அணியிலிருந்து நீக்கம்: ரகானே விரக்தி
இந்திய அணியிலிருந்து தான் நீக்கப்பட்டது குறித்து ரகானே மிக வருத்தத்துடன் சில கருத்துகளை கூறியுள்ளார். அதில், "சில வருடங்களுக்கு முன்பு நான் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டேன். ஆனாலும் மீண்டும் எனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலக டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த போட்டியில் நான் சிறப்பாக செயல்பட்ட போதும் ஏன் திடீரென அணியில் இருந்து என்னை நீக்கினார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு மூத்த வீரராக எனக்கு இன்னும் ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் என்னை திடீரென புறக்கணித்தார்கள்.. இது குறித்து நான் யாரிடமும் எதுவும் கேட்கப் போவது கிடையாது. ஏனெனில் அப்படிப்பட்ட ஆளும் நான் கிடையாது. என்னுடைய சிறப்பான செயல்பாடு மூலம்தான் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முயற்சிப்பேன். எனக்குள் இன்னும் அந்த பழைய நெருப்பும், ஆர்வமும் மிஞ்சி இருக்கிறது. அந்த வகையில்தான் தற்போது ரஞ்சி தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறேன். மும்பை அணிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்திருக்கிறேன் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
19 Jan 2026சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்ட சபை இன்று கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி.
-
வரும் 22-ம் தேதி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
19 Jan 2026சென்னை, மத்திய அமைச்சரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளருமான பியூஸ் கோயல் நாளை (புதன்கிழமை) சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு
19 Jan 2026பெய்ஜிங், சீனாவில் தொடர்ந்து 4-வது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவை கண்டுள்ளது. இது தொடர்பாக அரசு அறிவித்த பல்வேறு திட்டங்கள் பலனற்று போயின.
-
டெல்லியில் லேசான நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிதாக அமைகிறது நீர்த்தேக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
19 Jan 2026செங்கல்பட்டு, 1.6 டி.எம்.சி.
-
லடாக்கில் நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, லே லடாக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
19 Jan 2026சென்னை, குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
-
பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல்
19 Jan 2026புதுடெல்லி, பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடக்கிறது. இன்றே புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகிறது.
-
பா.ம.க. எங்களுக்கே சொந்தம்: ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு
19 Jan 2026சென்னை, பா.ம.க. கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
-
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்: 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்
19 Jan 2026சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
செர்பியா நாட்டில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி
19 Jan 2026நோவி சாத், செர்பியா அரசில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
19 Jan 2026சென்னை, சென்னையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும், ஆபரணத் தங்கம் விலை மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையானது.
-
பனையூரில் இன்று நடைபெறுகிறது 12 பேர் அடங்கிய த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
19 Jan 2026சென்னை, பனையூரில் இன்று நடைபெறுகிறது த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம்.
-
இ.பி.எஸ்.சுடன் தனியரசு சந்திப்பு?
19 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து பேசினார்.
-
காஸா தொடர்பான அமைதி வாரியம்: இந்தியாவுக்கு ட்ரம்ப் அழைப்பு
19 Jan 2026நியூயார்க், காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்
-
அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதை செய்வேன்: அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அதிரடி முடிவு
19 Jan 2026நியூயார்க், இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதைச் செய்வதில் கவனம் செலுத
-
தமிழகத்தில் விடைபெற்ற வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெற்ற நிலையல் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுக்கடுக்கான தொடர் கேள்வி: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டம்
19 Jan 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் 2-வது முறையாக நேரில் ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம் தாமதமாக வர காரணம் என்ன? உள்ளிட்ட அடுக்கடுக்கான தொடர் கேள்விகளை சி.பி.ஐ.
-
கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்: கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்
19 Jan 2026சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றுவரும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில
-
பாகிஸ்தானில் பயங்கரம்: வணிக வளாக திடீர் தீ விபத்தில் 14 பேர் பலி
19 Jan 2026கராச்சி, பாகிஸ்தானில் நாட்டில் வணிக வளாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசம் நீட்டிப்பு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
திபெத்தில் நிலநடுக்கம்
19 Jan 2026பெய்ஜிங், திபெத்தில் ரிக்டர் 4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள 'மாமல்லன்' ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
19 Jan 2026மாமல்லபுரம், 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீரை சேமித்து மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும
-
அவதூறு வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராகாத ராகுல் காந்தி விசாரணை ஒத்திவைப்பு
19 Jan 2026லக்னோ, பா.ஜ.க. நிர்வாகி தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராகததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-
ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழப்பு 21 ஆக உயர்வு
19 Jan 2026மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.


