முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 30 புதிய பூங்காக்கள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2025      தமிழகம்
KN-Nehru 2023 04 01

சென்னை, சென்னையில் இந்தாண்டு 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரத்தின் போது. சென்னையில் உள்ள பூங்காக்களில் மேம்பாட்டு பணிகள் குறித்து  சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வடபழனி  மாநகராட்சி பூங்காவில்  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 75 லட்சம் மதிப்பீட்டில்  அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளதாக கூறினார்.

 மேலும், சென்னையில்  32 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.  273 பூங்காக்கள் 30 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தார். தொல்காப்பியர் பூங்காவில் புதிய நுழைவாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர்கள் மாடம், அரங்கம், இணைப்பு பாலம், கண்காணிப்பு கேமரா பொருத்துதல், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் முடிவடைய உள்ளதோடு விரைவில் முதல்வர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து