முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் ஏற்காடு கோடை விழா வரும் 23-ம் தேதி தொடக்கம்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025      தமிழகம்
Rajendharan-2024-12-20

சேலம், சேலம் ஏற்காடு கோடை விழா வருகின்ற 23ஆம் தேதி துவங்கி 29ஆம் தேதி வரை தொடர்ந்து 7 நாள்கள் நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். ஏற்காடு தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்காடு கோடை விழா முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு ஏற்காட்டில் கோடை விழா நடத்துவது தொடர்பான முன்னேற்பட்டு பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

கூட்டத்திற்கு பின்னர் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, 48வது கோடை விழா சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மலர் கண்காட்சியுடன் நடைபெற இருக்கிறது. வரும் 23-ம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை 7 நாள்களுக்குக் கோடை விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துெ அமைச்சர், வனத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

மலர் கண்காட்சியில் வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு விலங்குகளின் வடிவில் மலர் கண்காட்சி வடிவமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன. மேலும் மேட்டூர் அணை வடிவத்திலும் மலர் வடிவம் உருவாக்கப்பட இருக்கிறது.

இது மட்டுமின்றி 25 ஆயிரம் பூந்தொட்டிகளில் ஏற்காட்டில் மட்டும் விளையக்கூடிய மலர்களைக் கொண்டு மலர்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும் காய்கறிகளைக் கொண்டும் பல்வேறு வடிவங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தமிழக அரசின் அனைத்து துறைகளின் சாதனை விளக்க அரங்குகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இன்னிசை கச்சேரிகளும் நடத்தப்படுகிறது. கோடை விழா நடைபெறும் நாள்களில் நாய் கண்காட்சி, ஆரோக்கிய குழந்தை போட்டி கிரிக்கெட் போட்டி, கால்பந்து போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

கோடை விழாவினையொட்டி அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோடை விழாவின் போது மலை ஏறுபவர்கள் அஸ்தம்பட்டி, கொண்டப்ப நாயக்கன்பட்டி வழியாகவும், மலையிலிருந்து இறங்குபவர்கள் கொட்டச்சேடு வழியாகவும் சாலைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.

ஏற்காடு ஏரியில் மிதவை உணவக ஏற்பாடுகள் குறித்து கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திரன் மிதவை உணவகம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு கேரளாவில் இருந்து நிபுணர்கள் ஆய்வு செ

கோடை விழா சீசன் சமயத்தில் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக வரும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திரன், இது குறித்து புகார்கள் வந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தங்கும் விடுதிகள் சுற்றுலாப் பயணிகளிடம் வழக்கமான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து