எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை கொளத்தூர், பழனி உள்ளிட்ட 3 இடங்ளில் ரூ. 22.61 கோடி மதிப்பிலான புதிய முதியோர்கள் தங்கும் உறைவிடத்திற்கான (முதியோர் காப்பகங்கள்) அமைப்பதற்கான பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். கொளத்தூரில் மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
6 நிகழ்ச்சிகளில்....
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் 6 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். முதலாவது நிகழ்ச்சியாக ராஜாஜி நகரில் முதியோர்கள் தங்கும் உறைவிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கொளத்தூர் தொகுதியில் ரூ.8.88 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்கள் தங்கும் உறைவிடம், பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பாக ரூ.8.48 கோடி செலவிலும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சார்பாக ரூ.5.25 கோடி செலவிலும் முதியோர் தங்கும் இடத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். மொத்தம் 22.61 கோடி மதிப்பீட்டில் இந்த 3 உறைவிடங்களுக்கான (முதியோர் காப்பகங்கள்) பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
பல்வேறு வசதிகள்...
இந்த மூத்தக் குடிமக்கள் உறைவிடங்களில் வரவேற்பறை, குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள், உணவருந்தும் அறை, பல்நோக்கு அறை, சமயலறை, பார்வையாளர்கள் அறை, நூலகம், அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவ மையம், நடைபாதை வசதிகளுடன் கூடிய சிறு பூங்கா, பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படுகின்றன.
பணி நியமன ஆணை...
இந்த விழாவில் மாற்றுத் திறனாளி பிரியவதனா என்பவருக்கு பெண் ஓதுவாருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அவர் முதல்வரை பாராட்டி பாடல் ஒன்றை பாடினார். இதைத்தொடர்ந்து வி.கே.எம். காலனியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் படித்த 350 மாணவ-மாணவிகளுக்கு தையல் எந்திரம் 131 பேருக்கு லேப்டாப் மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்ட 100 பேருக்கு இலவச கண்ணாடி ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மாணவர்களுக்கு பாராட்டு....
இதைத் தொடர்ந்து ரூ. 4.36 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்கா ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் நடந்த விழாவில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் 318 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பாராட்டினார். இதையடுத்து பெரியார் நகர் மெட்ரிகுலேஷன் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். குமரன் நகர் 80 அடி சாலையில் புதுப்பிக்கப்பட்ட தணிகாசலம் நகர் கால்வாயை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
முதல்வருக்கு வரவேற்பு...
கொளத்தூர் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 6 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். வழிநெடுக சாலையின் இருபுறமும் நின்று பெண்கள் முதலமைச்சரை வரவேற்று வாழ்த்து கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, எம்.பி.க்கள் கிரிராஜன், கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. பா. ரங்கநாதன், பகுதி செயலாளர் ஐ.சி.எப். முரளி நாகராஜன், மண்டல தலைவர் சரிதா, நிர்வாகிகள் சந்துரு, மகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 4 weeks ago |
-
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை: ரிக்கல்டான்
27 May 2025ஜெய்ப்பூர் : பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டான் தெரிவித்துள்ளார
-
சிங்கப்பூர் சென்றடைந்தது இந்திய எம்.பி.க்கள் குழு
27 May 2025சிங்கப்பூர் : சிங்கப்பூருக்கு இந்திய எம்.பி.க்கள் குழு சென்றடைந்துள்ளது.
-
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
27 May 2025பவானிசாகர், பில்லூர் அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் வார் ரூம் புகைப்படங்கள் வெளியீடு : தாக்குதலை நேரலையில் பார்த்த தளபதிகள்
27 May 2025புதுடில்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியபோது வார் ரூம் எப்படி இருந்
-
ஆபரேஷன் சிந்தூர் அடுத்த கட்டம் நோக்கி செல்ல மக்களின் வலிமை தேவை: பிரதமர் நரேந்தி மோடி பேச்சு
27 May 2025காந்திநகர், ஆபரேஷன் சிந்தூர் அடுத்தக்கட்டம் நோக்கி செல்ல மக்களின் வலிமை தேவைப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
-
டெல்லி பயண விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
27 May 2025சென்னை : டெல்லி பயண விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த
-
பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்லோவேனியா ஆதரவு: கனிமொழி எம்.பி நம்பிக்கை
27 May 2025லியூப்லியானா, பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்லோவேனியா எங்களுடன் நிற்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. பெண் நிர்வாகி மீது தாக்குதல்: தலைவர் விஜய் கடும் கண்டனம்
27 May 2025சென்னை, வியாசர்பாடி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சென்ற த.வெ.க. நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது என்று விஜய் கூறியுள்ளார்.
-
டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: டீசல்-பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
27 May 2025திருவள்ளூர், டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
இன்றுடன் முடிவடைகிறது 'கத்தரி வெயில்'
27 May 2025சென்னை : தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் (28-ந் தேதி) முடிவடைகிறது.
-
அயோத்தியில் அலைமோதும் பக்தர் கூட்டம்
27 May 2025புது டில்லி : உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.
-
ராஜஸ்தானில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி
27 May 2025ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி
-
5-ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்
27 May 2025புதுடெல்லி, 5-ம் தலைமுறை போர் விமானங்களை தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
-
அங்கீகாரமற்ற நர்சரி பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
27 May 2025சென்னை : “அங்கீகாரமின்றி செயல்படும் நர்சரி பள்ளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என, அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார்.
-
பஹல்காமில் அமைச்சரவைக் கூட்டம்: சுற்றுலாவை மீட்க ஒமர் நடவடிக்கை
27 May 2025ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாவை மீட்க பஹல்காமில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் 3 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்'
27 May 2025திருவனந்தபுரம், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் அடுத்த மூன்று நாட்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-05-2025
27 May 2025 -
சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்டுகள் சரண்
27 May 2025சுக்மா : சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்டுகள் சரண்ணடைந்து உள்ளனர்.
-
கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாறு, சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு
27 May 2025கோவை : கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம், கன மழை காரணமாக ஒரே நாளில்,4 அடி உயர்ந்துள்ளது.
-
சட்டவிரோத குடியேற்றம்: டெல்லியில் 92 வங்கதேசத்தினர் கைது
27 May 2025புதுடெல்லி : டெல்லியில் போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 92 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ரூ. 500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு கோரிக்கை
27 May 2025கடப்பா : நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிக்க ரூ. 500 நோட்டுகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்
27 May 2025தெஹ்ரான் : இந்தியா உடனான இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
-
ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
27 May 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
-
ஈரானில் நீதிபதி கத்தியால் குத்திக்கொலை
27 May 2025தெஹ்ரான் : ஈரானில் நீதிபதிக்கு கத்திக்குத்து விழுந்தது.
-
ரொனால்டோ பதிவால் ரசிகர்கள் சோகம்
27 May 2025ஜெட்டா : பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ பதிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்-நசீர் அணிக்காக...