முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 5 ஜூன் 2025      விளையாட்டு
RCB-ISSUE

Source: provided

பெங்களூரு: பெங்களூரு நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

11 பேர் உயிரிழப்பு...

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்.சி.பி.) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு தரப்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

‘ஆர்.சி.பி. கேர்ஸ்’...

இந்நிலையில், நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் நேற்று (ஜூன் 5) அறிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் உதவிக்காக ‘ஆர்.சி.பி. கேர்ஸ்’ என்ற நிதி தொகுப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தலா ரூ.10 லட்சம்... 

 இது குறித்து ஆர்.சி.பி. தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நேற்று பெங்களூருவில் நடந்த துரதிருஷ்டவசமான சம்பவம் ஆர்.சி.பி. குடும்பத்துக்கு மிகுந்த வேதனையைத் தந்துள்ளது. இந்தத் தருணத்தில் மரியாதை நிமித்தமாகவும், பாதிக்கப்பட்டோருக்கு துணை நிற்கும் வகையிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சார்பில் வழங்கப்படும்.

ஒன்றுபட்டு நிற்கிறோம்...

காயமடைந்தவர்களுக்கு உதவும் வகையில் ‘ஆர்.சி.பி. கேர்ஸ்’  என்ற பெயரில் நிதித் தொகுப்பும் உருவாக்கப்படும். அதன் மூலம் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். நாங்கள் முன்னெடுக்கும் எல்லா காரியங்களிலும் எங்களின் ரசிகர்களே பிரதானமாக இருப்பார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தச் சோதனையான நேரத்தில் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான முன்னுதாரணம்...  

முன்னதாக, பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைக்கியா, “எனக்கு மிகுந்த அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் முறையாக திட்டமிடவில்லை. இதற்காக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது தவறான முன்னுதாரணம் ஆகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து